search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletic competition"

    • உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
    • தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த எஸ்.வி தாரகராம மைதானத்தில் மாநில அளவிலான 42-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.

    குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 95). இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் நடைபெறும் பொதுநிலை தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    நேற்று நடந்த தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு வட்டு எறிதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு அசத்தி காட்டினார்.

    வருகின்ற 2024-ம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். சைவ உணவும், உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

    இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
    • ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

    வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
    • ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்

    திருவண்ணாமலை:

    கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    • நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
    • போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

    நெல்லை:

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நெல்லையில் மாவட்ட அளவில் 3 நாள் நடக்கும் தடகள போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

    இந்த போட்டியில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்பட 79 போட்டி கள் நடத்தப்படுகிறது.

    போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வரு கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    • கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருவண்ணா மலையில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.

    விழாவிற்கு மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து தடகள போட்டிகளை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்மு கப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார். சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.

    இன்று நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் திருவண்ணா மலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

    • கலெக்டர் போட்டிகளை தொடக்கி வைத்தார்
    • முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கே. சி. வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி. செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ேஜாலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

    இதற்கு அறக்கட்டளை தலைவர் சுசிகர், செயலாளர் தென்னரசு, பயிற்சியாளர்கள் சபரிகுமார், ஏசுராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி. சேது ராஜன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க கவுரவத் தலைவர் எஸ். பி. சீனிவாசன், பொருளாளர் ஏ. பார்த்திபன் செயலாளர் எம். சிவப்பிரகாசம், தேர்வு குழு தலைவர் கே. மதன்குமார், உள்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம் .சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    அதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய, 5 பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி மாணவி யருக்கான போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில், பிளஸ்-2 மாணவி கீர்த்தனா, உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். பிளஸ்-1 மாணவி ஸ்ரீசிவநிதி 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம், 400 மீ. ஓட்டத்தில் 3-ம் இடம் பிடித்தார்.

    9-ஆம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் 2-ம் இடம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், பிளஸ் 2 மாணவி ஷோபனா பிரியா 100 மீ. ஓட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவியருக்கு, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அரசு ஊழியர்களுக்கான போட்டியில், இப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீரராகவன், நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், உடற்கல்வி ஆசிரியர் ஜீவா, கையுந்து பந்து குழு போட்டியில் முதலிடம் பெற்றனர்.

    இப்போட்டிகளில் வெற்றிபெற்ற, மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியருக்கு, ரூ. 19 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்
    • 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டியை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. இந்த போட்டி கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இதில் 28 மாநிலங்களில் இருந்து 950-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பகல், இரவாக நடைபெற இப்போட்டியில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.

    மாநில தடகள சங்க செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் வெங்கட், பிரியா விஜயரங்கன், சேஷாத்திரி உள்பட நடுவர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் 4 பேர் புதிய சாதனை படைத்து உள்ளனர்.

    ஆண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் போட்டியில் உத்தரபிரதேஷத்தை சேர்ந்த ஷாருக்கான என்பவர் 9 நிமிடம் 5 விநாடியில் தடைகளை தாண்டியுள்ளார்.

    அதேபோல் ஆண்கள் பிரிவில் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தேவ்மீனா என்பவர் 5 மீட்டர் தாண்டினார்.

    பெண்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புஷர்கான்கவுரி என்பவர் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தை 9 நிமிடம் 35 விநாடியில் ஓடியும், மகராஷ்டிராவை சேர்ந்த அனுஷ்கா தாதர்கும்பா என்பவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 1 நிமிடத்தில் ஓடியும் புதிய சாதனையை படைத்து உள்ளனர்.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் - அைமச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று ராணிப்பேட்டை பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது.

    போட்டியை மாவட்ட அளவிலான தடகள போட்டியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 100மீ, 200மீ, 400மீ ஓட்டத்தினை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், நகரமன்ற நகரமன்ற தலைவர்கள் ஹரிணி (வாலாஜா) அமீன் (மேல்விஷாரம்) துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
    • தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர்.

    கோவை,

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 14-ந் தேதியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

    இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தடகள போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டதது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில்

    கோவை மாவட்ட அத்லட்டிக் தலைவர் ஸ்ரீபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
    • ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே லட்சியம் என்று பயிற்சி யாளர் தெரிவித்தார்.

    திருப்பூர் :

    சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் திருப்பூர் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் அந்த கிளப்பின் பயிற்சியாளர் பிரபு மாரிமுத்துவுக்கு 15க்கும் மேற்பட்ட மாநில மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்கியதற்காக சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று பயிற்சியாளர் பிரபு மாரிமுத்து தெரிவித்தார். 

    • தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 11ந்தேதி துவங்கி ஒரு வாரமாக நடந்து வருகிறது. குழு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    முன்னதாக சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.

    முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், முதல் மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர் என 4பிரிவினருக்கு ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் 876 பேர், கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில், 250 பேர், அரசு ஊழியர் பிரிவில் 263 பேர், பொதுப்பிரிவில் 132 பேர் என மொத்தம் 1,521 பேர் தடகள போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தடகள போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

    போட்டியை துவக்கி வைக்க வந்த திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மைதானத்தில் களமிறங்கி குண்டு எறியும் இடத்துக்கு வந்தார். வட்டத்துக்குள் நின்று குண்டை தோளில் வைத்து எறிந்தார். சிறிதுதூரம் சென்று குண்டு விழுந்தது. 

    ×