என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூரில் தொடங்கியது மாநில இளையோர் தடகள போட்டி
- தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
செங்கல்பட்டு:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 4-வது மாநில இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( 18 முதல் 20 வயதுக்குட்பட்டோர்) இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மார்ச் 10 முதல் 12-ந்தேதி வரை நடைபெறும். 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Next Story