search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Reopen"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி 7,8 மற்றும் 9-ந்தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந்தேதி 835 பஸ்களும் 8-ந்தேதி 570 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு இந்த இரு நாட்களும் 160 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    10-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்க இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செல்லக்கூடியவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
    • ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஜூன் 6-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன், ராமதாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கடும் வெயில் எதிரொலியால் பள்ளிக் கூடங்கள் 2 வாரங்கள் தள்ளி திறக்க வேண்டும் என்று ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் கடும் வெயில் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

    எனவே பள்ளிக்கூட திறப்பு தேதியை இரண்டு வாரங்கள் ஒத்திப் போடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
    • நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

    கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை.

    கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்ததால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது.
    • மாணவ-மாணவிகளின் அளவிற்கு ஏற்ப அளவீடு செய்து சீருடை தைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட கல்வி சார்ந்த உபகரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

    சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகின்ற நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்க ஏற்பாடு நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் அனைத்து பொருட்களும் சென்றடைய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நேர்த்தியாக தைத்து கொடுக்க அரசு முடிவு செய்தது. மாணவ-மாணவிகளின் அளவிற்கு ஏற்ப அளவீடு செய்து சீருடை தைக்கப்பட்டுள்ளது.

    சீருடை தைப்பதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டு தைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை சமூக நலத்துறை ஏப்ரல் மாதமே தொடங்கியது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ட்-பேண்ட், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர்-சர்ட் வழங்கப்படுகிறது.

    மாணவிகளை பொறுத்த வரை 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட் மற்றும் சர்ட்டும், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை-சர்ட், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு கோர்டுடன் சுடிதார் தைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளியைப் போல மிடுக்காக செல்லும் வகையில் சீருடை அளவு எடுத்து தைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்ததால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை மிக சீரிய முறையில் சீருடை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், பள்ளி திறக்கின்ற நாளில் அவை வழங்கப்படும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
    • டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

    வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதிக்கிறது.

    எனவே வெயில் காலமான இப்பொழுது மாநிலத்தின் பலப்பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். நிலவும் கடுமையான வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவர்களது பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை. அது மட்டுமல்ல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அதிக வெப்ப நிலையால் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், முதியோர் மயங்கி விழுந்ததும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வருத்தத்துக்குரியது.

    குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்ப நிலை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6-ந்தேதி பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒருவார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
    • மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பள்ளிகளில் மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.

    மாணவா்களுக்கு அளிக்கப்படும் இந்த நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதாா் எண் அவசியமாகிறது.

    பயிலும் பள்ளிலேயே ஆதாா் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதாா் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது.

    தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதாா் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதாா் தரவு உள்ளீட்டாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் 'பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான ஜூன் 6-ந்தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படவுள்ளது. இந்நிகழ்வை அமைச்சா்கள், பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.
    • பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 6-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதால் தூய்மைப் பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை புதிதாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    பள்ளிக்கூடம் திறந்ததும் 3 திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும் அதுவும் பள்ளி வளாகத்திலேயே பயன்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதனை தடை செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இரண்டாவதாக ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோருக்கு தெரிவிக்க முடியும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 70 லட்சம் பெற்றோர்களின் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பெற்றோர்களின் செல்போன் எண்களையும் பள்ளி திறந்ததும் இணைக்கப்படுகிறது.

    மூன்றாவதாக மாணவர்கள் கையில் கட்டும் வண்ணக் கயிறுகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையில் கையில் வண்ணக் கயிறுகள் கட்டப்படுவதால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கையில் கட்டப்படும் வண்ணக் கயிறுகளுக்கு தடை கொண்டு வரும் உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜூன் 6-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் வெளியூர்களுக்கு சென்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் சென்னை திரும்பி வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

    கூலி வேலை, வியாபாரம், அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விட்டு விட்டு தங்கள் பணியை தொடர்ந்து செய்து வரும் அவர்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

    இந்த வாரம் இறுதிக்குள் பெரும்பாலானவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்பி விடுவார்கள் என்றாலும் சிலர் அடுத்த வாரம் பயணத்தை தொடங்கலாம். 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    எனவே 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன. அதனால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    அடுத்த வாரம் தேர்தல் முடிவு வருவதால் 4-ந்தேதி மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் 5-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜூன் 15-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் வருவதால் தேவைக்கேற்ப பஸ் வசதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
    • அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    ×