search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School reopen"

    • மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
    • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து கண்காணிக்க வலியுறுத்தல்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. தமிழ்நாட்டில் இன்று சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் வெளியில் சதம் அடித்தது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி ஜூன் 7ம் தேதிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளதால் இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்  தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும்.
    • 2024ம் ஆண்டு மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமாகும்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி நடத்தப்படும். பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 19ம் தேதி தொடங்கி நடைபெறும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப் ரல் 8ம் தேதி தொடங்கும்.

    அடுத்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள், பொருட்கள் தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இந்த ஆண்டு பள்ளி வேலை நாட்களான 230 நாட்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பளுவும் இல்லாமல் இந்த ஆண்டு கல்வி திட்டத்தை முழுமையாக முடிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படும்.

    மாணவர்களின் தேர்வுத் தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் பள்ளி தேர்வுத்தாள், அரசுப் பள்ளி தேர்வுத்தாள் ஆகியவற்றை ஒன்றாக கலந்துதான் மதிப்பெண் கூட்டுவதற்காக வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் வழங்கப்படுகிறது என்கிற தகவல் தவறானது.

    ஆசிரியர்கள் திருத்துவது அரசு பள்ளி மாணவரின் தேர்வுத் தாளா அல்லது தனியார் பள்ளி மாணவர்களின் தேர்வுத் தாளா என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. மதிப்பெண் கூட்டல் முடிந்த பிறகுதான் அது எந்த பள்ளி மாணவரின் தேர்வுத் தாள் என்பதை ஒன்றாக சேர்ப்போம். எனவே இது போன்ற தகவலை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். மாணவர்கள் எழுதிய விடைகளுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

    தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை பெறும் வகையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் கருத்துக்களை சொல்கிறோம். கடந்த ஆண்டு கூட மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் அளவுக்கு கருத்துக்களை தெரிவித்தோம்.

    தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் சரி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் திறமைக்கான ஒரு நாற்காலி இருக்கிறது. இதில் முதலமைச்சர் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். மார்க் முக்கியம்தான் அதை இல்லை என்று சொல்ல வில்லை, படியுங்கள். உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த திறமைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.

    மதிப்பெண் குறைந்துவிட்டால் திறமை இல்லையோ என்று கருதிவிட வேண்டாம். உங்களுடைய திறமைக்கேற்ற நாற்காலி எங்கோ ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்ற வகையில்தான் நீங்கள் அதை அணுக வேண்டும்.

    தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறுவர்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம். விடுமுறை நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
    • மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது.

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரை வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

    இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும். மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும்.

    அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நேற்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. உற்சாகமாக வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நவம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனால் நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 522 அரசு தொடக்கப் பள்ளிகளும், 72 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், 105 ,தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப் பள்ளிகளும், 203 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 18 அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும், 11 ,தனியார் மற்றும் சுயநிதி நடுநிலைப் பள்ளிகளும் என ஆக மொத்தம் 931 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    அந்த வகையில் கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவுவாயிலில் இருபுறமும் வாழை மரங்கள், தோரணங்கள், காகித கொடிகள் கட்டப்பட்டிருந்தது. பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை தலைமையாசிரியர் தென்றல் வாசுகி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆரத்தி எடுத்து மலர்தூவி, பூங்கொத்து கொடுத்து, சந்தனம் வைத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்து, கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, முககவசத்துடன் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரவைத்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தோரணங்கள் கட்டப்பட்டு, மேளதாளத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டதால், லேசாக பெய்த மழையை பொருட்படுத்தாமல் நேற்று மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்ததை காணமுடிந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் 19 மாதங்களுக்கு பிறகு தன்னுடன் படித்தவர்களை நேரில் பார்த்தவுடன் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
    பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 1 முதல் 7ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் உற்சாகமாக காணப்பட்டனர்.

    பள்ளிகள் அனைத்தும்  சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய சிறிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது, சானிடைசர் வழங்கப்பட்டது, மாஸ்க் அணிவது உறுதி செய்யப்பட்டது. 

    இதேபோல் 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பள்ளிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
    தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இனிப்பு, பூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

    அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ஆசியர்கள் பூக்கள் கொடுத்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். மாணவர்கள்- மாணவிகளும் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் சென்றனர்.

    பள்ளிகளின் வாசலிலேயே காய்ச்சல் சோதனை செய்யப்பட்டு, கைகள் சுத்தம் செய்த பிறகு, முகக்கவசம், கையுறைகள் வழங்கப்பட்டு பின் மாணவர்களை வகுப்புகளுக்குள் அனுமதித்தனர். வகுப்பறைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்களை அமர வைத்துள்ளனர்.

    சில பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வருவார்கள் என்பதால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

    பள்ளிகள் திறப்பு

    மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் பாடங்கள் நடத்துவதற்கு பதில், முதல் 15 நாட்களுக்கு ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது முறையாக செயல்படுத்திய பிறகு பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    ×