search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வகுப்பறை
    X
    பள்ளி வகுப்பறை

    கேரளாவில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் உற்சாகம்

    பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 1 முதல் 7ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் உற்சாகமாக காணப்பட்டனர்.

    பள்ளிகள் அனைத்தும்  சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய சிறிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது, சானிடைசர் வழங்கப்பட்டது, மாஸ்க் அணிவது உறுதி செய்யப்பட்டது. 

    இதேபோல் 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பள்ளிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×