search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school transfer certificate"

    • கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
    • மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது.

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரை வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

    இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும். மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும்.

    அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.

    மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    ×