என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை கைதி"
- பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது.
- தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 2011-ம் ஆண்டு சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழகத்தின் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஒரு கை ஊனமான அவர், பாதுகாப்பான பிளாக்கில் இருந்து நேற்று காலை திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சுமார் 3½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றது எப்படி? என உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் சிறை அறையின் 3 இரும்பு கம்பிகளை அறுத்து விட்டு கிழிந்த போர்வைகளை ஒன்றாக கயிறு போல் கட்டி 7.5 மீட்டர் உயரம் உள்ள சிறைச் சுவரை ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.
சிறையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கோவிந்தசாமி தப்பிச் சென்றதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறையில் இருந்து தப்பிக்க கோவிந்தசாமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் அவருக்கு சிறைக்குள் இருந்து உதவி கிடைத்ததா? என கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கைதிகளை மேற்பார்வையிட தவறியதாக கோபுர அதிகாரியான துணை சிறை அதிகாரி ராஜீஸ், அறை பாதுகாப்பு பணி மற்றும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பணியில் இருந்த உதவி சிறை அதிகாரிகள் சஞ்சய், அகில் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கிடையில் தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு காரணமாக கண்ணூர் மத்திய சிறையில் இருந்து திருச்சூர் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.
- போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:
மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக ஆரோக்கியசாமி மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்.
- இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 58). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து விட்டார். இதையடுத்து ஆரோக்கிய சாமியை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஆரோக்கியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோலில் வீட்டுக்கு வந்து சென்றார். அதன் பிறகு அவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தற்செயலாக பார்த்த சக கைதிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த ஆரோக்கிய சாமியை மீட்டு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 20 நாட்களாக சத்தியராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
- தனிப்படை போலீசார் விழுப்புரத்துக்கு விரைந்து சென்று சத்தியராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 33). இவர் மீது கொலை, ஆதாய கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சத்யராஜ், திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7- ம் தேதி 2 நாட்கள் போலீஸ் காவலுடன் கூடிய பரோலில் மதுக்கூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சத்யராஜை பிடிக்க பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ்காரர்கள் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 20 நாட்களாக சத்தியராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் சத்தியராஜ் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விழுப்புரத்துக்கு விரைந்து சென்று சத்தியராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






