search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்த ஆயுள் தண்டனை கைதி
    X

    மதுரை மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்த ஆயுள் தண்டனை கைதி

    • கடந்த சில நாட்களாக ஆரோக்கியசாமி மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்.
    • இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 58). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து விட்டார். இதையடுத்து ஆரோக்கிய சாமியை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ஆரோக்கியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோலில் வீட்டுக்கு வந்து சென்றார். அதன் பிறகு அவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ஆரோக்கியசாமி சேவிங் ரேசர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தற்செயலாக பார்த்த சக கைதிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த ஆரோக்கிய சாமியை மீட்டு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×