என் மலர்
நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற நீதிபதி"
- நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
- யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, முன்னதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.
மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பழைய பொருட்கள் வைக்கும் அறையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
விசாரணைக் குழுவின் அறிக்கை, பணம் கண்டெடுக்கப்பட்ட அறை, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள், மறுநாள் அதிகாலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. கிடைத்த நேரடி மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமானவை என்று விசாரணை அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.
- டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.
சென்னை உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜீவ் சக்தேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திர பிரசன்ன முகர்ஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஷி ரப்ஸடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எஸ்,ராமச்சந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இதேபோல், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






