என் மலர்
நீங்கள் தேடியது "journalist murder case"
- பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டார்.
- உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025 இல் உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளனர். 2024 இல் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள் ஆவர்.
கொல்லப்பட்டவர்களில் 74 பேர மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் குறிப்பாக 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

காசா
தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 18 பேர், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேர், அமெரிக்காவில் 11 பேர், ஐரோப்பிய நாடுகளில் 10 பேர் பணியின்போது கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலைத் திட்ட ஊழல் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் கொல்லப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

முகேஷ் சந்திராகர்
இதுதவிர்த்து உலகளவில் பணியின்போது விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலைகளுக்கு மேலாக, உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆசியா-பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக சீனாவில் 143 பேரும், மியான்மரில் 49 பேரும் சிறையில் உள்ளனர்.

அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #GurmeetRamRahim






