search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurmeet ram rahim"

    • 2017-ம் ஆண்டு இரண்டு பெண்களை கற்பழித்த வழக்கில் சிறைத்தண்டனை.
    • கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு அடிக்கடி பரோல் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 10 மாதங்களில் மட்டும் ஏழு முறை பரோலில் வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முறை வெளியில் வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு பஞ்சாப்- அரியானா நீதிமன்றத்தில் வந்தபோது, குர்மீத் ராம் ரஹீம்-க்கு பரோல் வழங்கப்பட்டது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    அவர் மார்ச் 10-ந்தேதி சரண் அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை அவருக்கு பரோல் வழங்க அரசு முடிவு செய்யும் என்றால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் இந்த சலுகையை பெற்றுள்ளார். இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சலுகை பெற்றுள்ளார்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எத்தனை பேர் இதே அடிப்படையில் பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர். எத்தனை பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுளள்து.

    ராம் ரஹீம்-க்கு மூன்று முறை 91 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 21 நாட்கள், ஜூலை மாதம் 30 நாட்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.

    இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

    பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்  ரஹீம் சிங்  குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  #GurmeetRamRahim
    பாலியல் சாமியாருடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். #AkshayKumar
    தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அக்‌ஷய்குமார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் வழக்கில் கைதாகி 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.

    இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் சீக்கியர்கள் மத உணர்வை புண்படுத்தும் உடை அணிந்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பி வட மாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன. இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

    இதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சமீபத்தில் பஞ்சாப் சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் குர்மீத் ராம் ரகீம் சிங்கையும் அப்போதையை பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதலையும் அக்‌ஷய்குமார் தனது வீட்டில் சந்தித்து பேச ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ராம் ரகீம் நடித்த படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.



    இதனை பாதல் மறுத்து இருந்தார். இதுகுறித்து அக்‌ஷய்குமாரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்து நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சண்டிகாரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் அக்‌ஷய்குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சாமியாருடன் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆண்மை நீக்க வழக்கில் ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GurmeetRamRahim
    அரியானா:

    தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதனை அடுத்து,  அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் சிக்கி 38-க்கும் அதிகமானோர் பலியாகினர். பொதுச்சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்தது. 

    தனது ஆதரவாளர்கள் சுமார் 400 பேருக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி பஞ்ச்குலா சிபிஐ கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.

    அவரது மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜகதீப் சிங், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    ஜாமின் பெற்றாலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×