search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government official"

    • கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி .
    • வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி சேர்ந்தவர்கல்யாணசுந்தரம் (72),இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஆவார்.இவர்நீண்ட நாட்களாகவயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. நேற்று காலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.

    ×