என் மலர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழல்"
- டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
- இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
சென்னை:
டாஸ்மாக் வழக்கை வேறுமாநிலத்தில் விசாரிக்க பயமா என தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* டாஸ்மாக் தொடர்புடைய வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுத்தாக்கல் செய்யவில்லை.
* டாஸ்மாக் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறு தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம்.
* ஜெயலலிதா ஊழல் வழக்கைதான் வேறு மாநிலத்தில் விசாரிக்க அவர்கள் கோரினர்.
* டாஸ்மாக் வழக்குகளை பார்த்து தி.மு.க. அரசு பயப்படவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
* டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
* இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
* முதலமைச்சர் கடிதம் மூலமாக வலியுறுத்தியும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் பேசவில்லை.
* தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை என்றார்.
- டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
- நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
* டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
* டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க. அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
* டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
* நமது மாநிலத்தில் வழக்கு நடந்ததால், தி.மு.க. செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம்.
* தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.
* டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
* அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல.
* கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்?
* மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி.
* இந்த 9 மாதத்தில் எந்த அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்?
* 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. என்ன செய்தது?
* தூம்பை பிடித்து வாலை பிடித்த கதையாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
* நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.
* தமிழ்நாட்டிற்கு தி.மு.க. அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.
- டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேச அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
திமுக மீதான மதுபான ஊழல் குற்றச்சாட்டை மையப்படுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்திற்கு 'யார் அந்த தியாகி" என்ற பேட்ச் குத்தியும், பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். சட்டமன்றத்துக்குள்ளும் பதாகைகளுடன் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேச அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அதைப்பற்றி சட்டமன்றத்தில் பேச முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் விவகாரம் குறித்து இபிஎஸ் பேசியதும் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியவாறு அவைக்குள் கோஷமிட்டனர். இதனால் அவர்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத்ததோர்ந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறவில்லை. அவர் அவைக்குள்ளேயே இருந்தார். மேலும் தனது முறை வந்தபோது எழுந்து தனது தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசினார்.
ஏற்கனவே அதிமுகவில் இபிஎஸ் - செங்கோட்டையன் இடையே பனிப்போர் வலுத்து வரும் நிலையில், செங்கோட்டையன் வெளியேறாமல் அவையில் தனி ஆளாக தனது பணிகளை தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது, அதனால் அது பற்றி சபையில் பேச முடியாது. நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதை பற்றி சபையில் பேச விதிப்படி அனுமதியில்லை என்றார்.
நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே டாஸ்மாக் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, நான் எது குறித்து பேசினாலும் அவை குறிப்பில் இருந்து நீக்கினால் நான் என்ன பேசுவது? என்று கூறினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டசபையில் அதிக சப்தம் எழுப்பிய தருமபுரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் பெயரை சொல்லி சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டையில் 'யார் அந்த தியாகி' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
- மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- வழக்கை திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.TASMAC
புதுடெல்லி:
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு ஒரு ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் முறையிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு அரசியல் சாசன பிரிவு 139-ன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் விவகாரத்தை எழுப்பியுள்ளது.
எனவே இந்த வழக்கை விரைந்து வரும் திங்கட்கிழமை பட்டியலிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஈரோடு:
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
- தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தமிழகத்தில் நடைபெறும் கொலை சம்பவங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தது குறித்து?
பதில்: அவர் மட்டும்தான் கண்டிக்க வேண்டுமா, நாங்கள் கண்டிக்க கூடாதா? நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொலை சம்பவத்தை கண்டிக்கும் உரிமை உண்டு. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் அச்சத்துடனே வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலையில் சம்பந்தப்பட்டவர் யார்? கொடநாட்டில் கொலை நடந்தது, அதை செய்தது யார்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அதை சொல்ல முடியவில்லை. கொலை சம்பவங்கள் செல்போன் இருப்பதால் தற்போது வெளியில் வருகிறது. இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை.
தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய செயல். கொலைக்கு முன்பு பேசியதை காவல்துறை ஒட்டு கேட்கலாமே, அப்படி செய்திருந்தால் சம்பவம் நடப்பதற்கு முன்பே தடுத்திருக்கலாம், ஏன் அதை செய்யவில்லை?
கேள்வி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
பதில்: தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
கேள்வி: டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் குறித்த கருத்து என்ன?
பதில்: நடவடிக்கை எடுப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது.நாங்கள் தான் போராட வேண்டும். மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை குறித்து பேசுகிறார்கள். அருந்ததியர், இஸ்லாமியர், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறீர்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிய வில்லை. ஆனால் இங்கே இருப்பவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி வரு கின்றனர்.
கேள்வி: விஜய், தி.மு.க. வின் பி டீம் என்கிறார்களே?
பதில்: விஜய்க்கு எங்களை போன்று வெளி யில் வர நேரமில்லை. நேரம் வரும்போது வெளியே வருவார்.முதலில் என்னை தி.மு.க.வின் பி டீம் என்றார்கள். அண்ணாமலை கருத்துக்கு நான்பதில் சொல்ல வேண்டியதில்லை.
கேள்வி: மீனவர் பிரச்சி னையில் நடவடிக்கை எடுக் கப்படுகிறதா?
பதில்: 800 பேருக்கு மேல்சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். குஜராத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில், தமிழக மீனவருக்கு ஏன் பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள். பிரச்சினை இல்லை என்றால் ஏன் போராட்டம் வருகிறது. பொழுதுபோக்குக்காக யாரும் போராட்டம் நடத்த வில்லை.
கேள்வி: தனக்கு வழங்கப் பட்ட பதக்கத்தை திருப்பிக் கொடுத்த கோபி நயினார், தலித் ஜனநாயக பிரச்சினை குறித்து பேசினால் எதிர்ப்பு வருகிறது என்கிறாரே?
பதில்: பெரியார் குறித்து, திராவிடம் குறித்த இங்கு பேசினால் எடுபடாது. நான் மட்டுமல்ல, யார் பேசினா லும் எடுபடாது. ஆளுகிற அரசின் லஞ்சம், ஊழலுக்கு ஆதரவாக பேசினால் ஆதரவு கிடைக்கும்.
எதிர் கருத்து ஏற்றுக்கொள்ளப் படாது. இங்கே ஜனநாயகம் இல்லை, கொடுங்கோன்மை தான் நடக்கிறது. சாராய ஆலை அதிபர்கள் முதல்வ ராக இருந்தால் சாராய விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடக்கத்தான் செய்யும். சாராயம் விற்பதே குற்றம், ஆனால் அதிலும் ஊழல் என்பது அதைவிட குற்றம்.
அமலாக்கத்துறை நடவ டிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு மனு அளித்தது வேதனை அளிக்கிறது. முதலில் ஒரு லட்சம் கோடி என்றார்கள், பிறகு ஆயிரம் கோடி என்றார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து ரூ.100 கோடி, அதன் பிறகு எது வுமே இல்லை என்பார்கள்.
ஆயிரம்கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம். 2016-ல் டாஸ்மாக்கை மூடு வோம் என்றவர்கள், 2021-ல் அதைப் பற்றி ஏன் பேச வில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கால் அதிக விதவைகள் ்உருவாகுகி றார்கள் என பேசினார்கள் தற்போது அதைவிட அதிக மாக இளம்விதவைகள் உரு வாகியுள்ளார்கள்.
கேள்வி: தமிழக சட்ட மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாக வேல்முருகன் கூறியது குறித்து?
பதில்: இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழுக்கும், தமிழ் மொழி பேசுபவர்க ளுக்கும் எதிராக உள்ளது. தமிழக மக்களின் நலன் குறித்து சட்டமன்றத்தில் பேச முடியவில்லை என்றால் எதற்காக இந்த அரசு. மக்கள் தேவையில்லை, ஓட்டுக்காகத்தான் மக்களை வைத்திருக்கிறார்கள். எது அதிக பிரசிங்கித்தனம், எது அக்கறை என்பது 2026 தேர்தலில் தெரியும். நாங்கள் கேட்கும் சின்னம் கிடைத்தவு டன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
- ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.
மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
- தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1,078 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






