என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.... எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்
- டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
- இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
சென்னை:
டாஸ்மாக் வழக்கை வேறுமாநிலத்தில் விசாரிக்க பயமா என தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* டாஸ்மாக் தொடர்புடைய வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுத்தாக்கல் செய்யவில்லை.
* டாஸ்மாக் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்குமாறு தான் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம்.
* ஜெயலலிதா ஊழல் வழக்கைதான் வேறு மாநிலத்தில் விசாரிக்க அவர்கள் கோரினர்.
* டாஸ்மாக் வழக்குகளை பார்த்து தி.மு.க. அரசு பயப்படவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
* டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
* இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேசவேயில்லை.
* முதலமைச்சர் கடிதம் மூலமாக வலியுறுத்தியும் மீனவர் பிரச்சனை குறித்து பிரதமர் பேசவில்லை.
* தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறையில்லை என்றார்.






