என் மலர்
நீங்கள் தேடியது "BJP"
- நமது பிரதமர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எழுந்து நின்று கைத்தட்டியது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
- அவர்கள் 'மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். நாங்கள் அவர்களிடம் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை.
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கட்டிப்பிடித்து வரவேற்றார். பிரதமர் மோடி இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்று அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நெதன்யாகு காசாவில் இனப்படுகொலையை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான ஆதரவற்ற பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொன்ற நிலையில், பிரதமர் மோடி உரை நிகழ்த்தியது வெட்கக்கேடான பாதுகாப்பு" என கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:-
நமது பிரதமர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எழுந்து நின்று கைத்தட்டியது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவர்கள் 'மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். நாங்கள் அவர்களிடம் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. அது ஒரு தன்னிச்சையான எதிர்வினை. 140 கோடி இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி மீது இஸ்ரேல் மக்களின் அன்புதான் அது.
அவர்கள் (காங்கிரஸ்) இவை அனைத்திற்கும் சோகமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இல்லை.. ராகுல் காந்திக்கு வயதாகி வருவதால் அரியணையைப் பெற விரும்புகிறார். அவருக்கு அது கிடைக்காது. காங்கிரஸ் மகிழ்ச்சியற்றதாக இருக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கட்டும்.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
- தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
- சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு பதிவில்,
தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரெயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஐதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரெயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
- பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
* பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.
* எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
* பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
- அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2021-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. இளம்வயது சிறார்கள் கூட போதைப்பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டபேரவைத் தேர்தலில் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.
- அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!
ஓம் சாந்தி! என கூறியுள்ளார்.
- பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்.
- மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.
போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக NDA கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை முறையில் பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.
- கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது. ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.
- பராசக்தி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை
- விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"பாஜகவை எதிர்த்து பேசவில்லை என திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கான சான்றிதழ் ஒன்றிய அரசிடம் உள்ளது. எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என நம் தலைவர் கூறினார். தைரியமாக இன்று இந்தியாவில் பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் எங்கள் தலைவர்.
அந்தநேரத்தில் மற்றொரு படம் (பராசக்தி) ரிலீஸ் ஆனது. அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அந்தளவு மக்கள் தூக்கிப்போட்டு விட்டார்கள். ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்பதால் ஒருவர்கூட தியேட்டர் போகவில்லை. முதலமைச்சரின் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால் எங்கள் தலைவர் இன்றுவரை நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். திமுக படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது, விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை அரசியல் தலைவர்கள் நிப்பாட்ட வேண்டும். கரூர் சம்பவத்திற்காக மட்டும் விஜய் கண்கலங்கவில்லை. நேற்று 5 ஆயிரம் பேருக்குத்தான் காவல்துறை அனுமதி அளித்தது. சாலையில் 2 லட்சம் பேர் நின்றார்கள். அவர்களை பார்க்கமுடியவில்லை என்ற வலியில் கண்கலங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக பார்த்து பயந்த ஒரே இயக்கம் தவெக. நம் தலைவர் விஜய். அதனால்தான் இவ்வளவு நெருக்கடி." எனப் பேசினார்.
- குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
- தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை?
கரூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் புகார் அளித்தும் தற்போதுவரை கரூர் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களைப் பாதுகாப்பதா?
அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைகிறது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்படுகிறது.
இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். 26-ந்தேதி (வியாழன்) இந்த அலுவலகத்தை மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும்.
- நாகேன் ராய்க்கு பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
- ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் உள்ளார்.
பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
மேற்குவங்கத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, நாகேன் ராய்க்கு விருது வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக உள்ள வடக்கு வங்கதேசத்தில் உள்ள ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் இருப்பதால் இந்த விருது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல்களில் வடக்கு வங்கதேசத்தில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.






