search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளது.
    • ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை.

    பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், "பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக" குறிப்பிட்டார்.

    மேலும் அவர், "பெரம்பலூர் எம்பி தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வழங்கப்படும்.

    தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை" என கூறினார்.

    • பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
    • பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    உயர் கல்வி முதல் நிவாரண நிதி வரை - பலரும் அறிந்திராத பாரிவேந்தரின் மறுப்பக்கம்உயர் கல்வி முதல் நிவாரண நிதி வரை - பலரும் அறிந்திராத பாரிவேந்தரின் மறுப்பக்கம்உயர் கல்வி முதல் நிவாரண நிதி வரை - பலரும் அறிந்திராத பாரிவேந்தரின் மறுப்பக்கம்மக்களவை தேர்தலுக்கான கட்சிகளின் களப் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் அதன் எம்.பிக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.

    அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி எம்பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள நற்பணிகளை பட்டியலிட்டு இருக்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

    பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

    தமது ஏழ்மை நிலையால் உயர்கல்வி படிக்க வழியில்லாமல் சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த, கடலூர் மாவட்டம்

    வேப்பூர் ஒன்றியம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த, சத்யாதேவி என்ற மாணவிக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கும் முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அலுவலகங்கள் திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.

    முசிறிப் பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ரூ.1 கோடி நிதி எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் தரப்பட்டது.

    இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்பட 10 கிராமங்கள் பயன்பெற்றன. 

    பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குச் சொந்த நிதியில் போர்வெல் அமைத்துக் கொடுத்தார். தொட்டியம் - நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயான சாலை அமைத்துள்ளார்.

    லால்குடி - திண்ணியத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் உதவி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட

    கடும் வறட்சியால், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தமது சொந்தச் செலவில் லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கினார்.

    வெளிநாட்டில் தவித்தவர்களுக்கு தேடிச் சென்று உதவிய பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்து, 8 பேர் பலியாகினர்.

    பலியானோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த நிதியில் தலா ரூ.1 லட்சம் வழங்கி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

    வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாரா விதமாக மரணமடைந்த 6 நபர்களின் சடலங்களை, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மூலம் அவர்களின் உடல்களைக் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தார்.

    கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது.

    வெகுகாலமாகத் தொடர்கின்ற தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

    பொருளாதாரப் பற்றாக்குறையால் சிகிச்சை பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதம மந்திரி நிவாரண நிதியின் மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் பேரில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை 40 க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்

    ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உயர்தரமான இலவசச் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    இதன்படி 2019-ல் கொடுத்த தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச உயர் கல்வியை, தமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.

    50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை பிரதமர், நிதி அமைச்சர், ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே வாரியம் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    முறையாக எடுத்துக் கூறியதால் தற்பொழுது 2023 ஜூலையில் புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் பெரம்பலூருக்கு ரெயில் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி தமிழக அரசுக்கு வழங்கினார்.

    பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
    • மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

    மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

    உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.

    இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியீடு.
    • அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்

    கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

    தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டது.

    நீமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளை பயன்படுத்தியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி.

    தேர்தல் விதிக்கு முரணாக நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தொடர்பான ஆவண நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    நான் ஜூடிஷியல் (Non Judicial) முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், "கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் எண் 27 வேட்புமனுவை Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது" என்றார்.

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகினார்.
    • ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப்பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார்.

    ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    அரியானா முன்னாள் மந்திரியும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய சாவித்ரி ஜிண்டால் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    சமீபத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்
    • இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

    உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது.
    • தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    பெரம்பலூர்:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அணி என்பது ஒரு மகத்தான அணி. கொள்கைகான அணி. கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற அணி. தமிழக முதல்-அமைச்சர் தனது பிரசாரத்தை பெரம்பலூர், திருச்சி தொகுதியில் தொடங்கி தற்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

    நடைபெற இருக்கின்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது. முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ம.தி.மு.க.விற்கான பம்பர சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. நம்மை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் கூட பறிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நடுநிலையோடு, நேர்மையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இன்றைக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.

    தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும், மதச்சார் பின்மை என்கிற மகத்தான கொள்கையை காப்பாற்றவும், நாம் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    அதேபோல மத்தியில ஆளும் மோடி தலைமையிலான அரசு என்பது ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது, தமிழ் மக்களை புறக்கணிக்கிறது. தமிழை புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது.

    நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது போல, நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான். அதே நேரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய் வழங்கப்படு கிறது. அதாவது இரு மடங்காக வழங்கப்படுகிறது நமக்கு குறைத்து வழங்கப்படு கிறது. எனவே பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

    எதிர் தரப்பில் அமைந்தி ருக்கிற கூட்டணியில், ஒன்று நள்ளிரவு கூட்டணி. மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க. தலைமையிலான இந்த அணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    நேற்று அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.

    அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்த கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா ஆகியோர் திடீரென அண்ணாமலையின் காலில் விழுந்தனர்.

    இதை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் அண்ணாமலை திக்குமுக்காடி போனார். பின்னர் அவர்களை ஆசிர்வதித்து விட்டு எழுந்திருக்கும் படி கூறினார்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, தங்களுக்கு இப்போது தான் திருமணம் முடிந்ததாகவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது உங்களை பார்த்ததும், உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக காலில் விழுந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலை புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் என்பவரின் தாயாரை பா.ஜ.கவினர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவரின் காலில் விழுந்து அண்ணாமலை ஆசி பெற்றுக்கொண்டார்.

    • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
    • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

    ×