என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர், 

    'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.

    இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.

    பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.

    ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
    • சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

    பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.

    ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி.
    • தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும்.

    தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டி பெருமைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி எந்த திட்டமாக இருந்தாலும் சரி, பிரதம மந்திரி திட்டம் என்றுதான் அறிவித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் 125 நாட்களாக அதிகரித்து உள்ளார்.

    அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார் என்று பலரை சொல்லலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் வைக்க சொல்லி போராடலாமே.

    இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம். நாட்டில் இப்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது.

    எனவே அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியது. மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இன்று நாடு அமைதியாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார்.

    காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி. இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வருகிறது. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் ஜெயிப்போம் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நேரத்தில்தான் தி.மு.க. மக்களைப் பற்றி யோசிப்பது போல் பாசாங்கு காட்டுவார்கள்.

    ஆசிரியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழி யர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என்று பலரும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் இதுவரை யோசிக்காத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது.

    தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும் பங்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகின்ற னர். ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அவர்களைப் பற்றி யோசிப்பது போல் வெளிக் காட்டுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

    ஆனால் இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
    • சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு ஆகும். முதன்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை.

    பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதன்பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

    • பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
    • மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக் கூறி கண்டனம் வலுத்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே அதிஷியின் உரையை எடிட் செய்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ பரப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது.

    பஞ்சாபில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி பாஜக அமைச்சர் கபில் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   

    • முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.
    • அசாதுதீன் ஒவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அந்நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக முடியும். ஆனால், சட்டமேதை அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிரதமர், முதல்-மந்திரி அல்லது மேயர் ஆக முடியும் என தெளிவாகக் கூறுகிறது.

    இறைவனின் அருளால் ஒரு நாள் வரும், அப்போது நானும், இந்த தலைமுறையும் இருக்க மாட்டோம். ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார். முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்தார்.

    இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. அனில் போன்டே கூறுகையில், ஒவைசியின் பேச்சு பொறுப்பற்றது. எந்த ஒரு பெண்ணும் அடிமைத் தனத்தை விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்களே ஹிஜாப் அணிவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஈரான் போன்ற நாடுகளிலும் பெண்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

    • வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
    • கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

    பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுடன் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், கேரளாவில் பாஜக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என பாஜக தலைவர் சோபா சுரேந்திரன் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்று கருதுவதால், வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

    மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கம் பெரும் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் அதே வேகத்தை நிர்வாகத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டது. கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பா.ஜ.க. கட்சி தலைமைச் செயலகத்தில் நுழைய மக்கள் தயாராகிவிட்டனர். அது நடந்தால், மாநிலத்தில் என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்.

    மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பெறும் ஆதாயங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுவோம். கேரளாவில் என்டிஏ அரசாங்கத்தை அமைப்பதும், அம்மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவதும் பாஜகவின் நோக்கமாகும்.

    இவ்வாறு சோபா சுரேந்திரன் தெரிவித்தார்.

    • அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
    • எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.

    கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

    அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

    தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார். 

    • பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
    • இந்துமத வெறுப்பில்லாத அரசு.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "உங்கள் கனவ சொல்லுங்கள்" என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதலமைச்சருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:

    1. சீரான சட்டம் ஒழுங்கு.

    2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.

    3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.

    4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.

    5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.

    6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.

    7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.

    8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.

    9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.

    10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.

    11. இந்துமத வெறுப்பில்லாத அரசு.

    மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும் என்று கூறியுள்ளார். 



    • சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    * பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    * பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

    • சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
    • அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர்.

    2 தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×