என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP"
- எம்.பி.யின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
- வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் அக்கட்சியால் வெற்றிபெற முடியாது எனத் தெரிவித்தார்.
இந்தி மொழி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என அவர் குறிப்பிட்டது சர்ச்சையானது. இதுகுறித்த காணொலி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
எம்.பி.யின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி எம்.பி.செந்தில்குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செந்தில் குமார் எம்.பி.யின் பேச்சு குறித்து அறிந்த தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கண்டித்ததாக தி.மு.க. அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கும்போது அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
#WATCH | Winter Session of Parliament | DMK MP DNV Senthilkumar S expresses regret over his 'Gaumutra' remark and withdraws it.
— ANI (@ANI) December 6, 2023
"The statement made by me yesterday inadvertently, if it had hurt the sentiments of the Members and sections of the people, I would like to withdraw… pic.twitter.com/S0cjyfb7HU
- மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை இந்திய நாட்டின் பொருளாதார சூழ்நிலை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்பு, இரண்டு கொடிகள் எப்படி இருக்க முடியும். இதை செய்தவர்கள், தவறு செய்துள்ளனர். நம்நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம். அதை செய்துள்ளோம்.
இவ்வாறு அமித் ஷா குறிப்பிட்டார்.
- கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
- ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி,
எம்.பி. பாபா பாலக்நாத், மத்திய மந்திரி கஜேந்திர சகாவாத் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.
இந்நிலையில் கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை முதல்- மந்திரியை கட்சி தலைமை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் வசுந்தரா ராஜே வீட்டுக்கு சென்ற 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ராவத் கூறுகையில், வசுந்தரா ராஜே தனது பதவி காலத்தில் முதல்-மந்திரியாக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
இதற்கிடையே ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்யும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.
புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பா.ஜனதா 5 மாநில தேர்தலுக்கு முன்பாக 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.
- நான்கு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது.
4 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இது பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது. இந்த அரையிறுதி போட்டியில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.
ஆனால், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. மேலும், மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் சற்று எதிர்பார்த்திருக்காது. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் அசோக் கெலாட் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரது நம்பிக்கையை பா.ஜனதா சிதைத்துவிட்டது.
இந்த மூன்று மாநில வெற்றிகள் மூலம் பா.ஜனதா மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாக பா.ஜனதா உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஹரியானா, உத்தரகாண்ட், திரிபுரா, மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில் அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இணைந்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநில அரசுகளுக்கு சென்றடைய மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் மக்கள் பயனடைவார்கள் என்பதை பா.ஜனதா தாரக மந்திரிமாக கொண்டுள்ளது. தற்போது இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் மேலும் இரண்டு மாநிலங்கள் இணைந்துள்ளன.
- 2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது.
- காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அல்லது கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி வாகை சூடி அமோக வெற்றி பெற்றுள்ளது. 230 இடங்களில் 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பா.ஜனதா தற்போது அதிகமாக 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. 2018-ல் பா.ஜனதா 41.02 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது 48.55 சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.
காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40.89 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது, தற்போது 40.40 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஒரே வாக்கு சதவீதமாக இருந்தாலும் 114 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைந்துள்ளன.
2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
2008-ல் 37.64 சதவீத வாக்குகளுடன் 143 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 71 இடங்களுடன் 32.39 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
2003-ல் பா.ஜனதா 173 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது 42.50 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் 38 தொகுதிகளுடன் 31.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
- ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 39 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவின் கமாரெட்டி தொகுதியில் பி.ஆர்.எஸ் சார்பில் முதல் மந்திரி கே.சி.ஆர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டியும், பா.ஜ.க. சார்பில் வெங்கட ரமண ரெட்டியும் போட்டியிட்டனர்.
இதில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி சுமார் 6,741 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சி.ஆரையும், 11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
- தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் பின்னடைவில் இருந்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க உள்ளது.
இந்நிலையில், 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தப் போர் தொடரும்.
தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் - தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
உழைப்பிற்கும் ஆதரவிற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
- தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கை பாஜகவின் மீது உள்ளது.
இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம்.
தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே, பாஜக மீது உங்கள் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.
தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக நிர்வாகியின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- வசுந்தரா ராஜே காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார்.
- வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. எம்.பி. தியா குமாரி 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. கட்சி 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் மாலை 4 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் பாஜகவும், 19 தொகுதிகளில் காங்கிரசும் வென்றுள்ளது.
இதில் ராஜஸ்தானின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. வேட்பாளருமான வசுந்தரா ராஜே 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

இதேபோல், வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக எம்பியான தியா குமாரி 158516 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை 71368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.