என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. தலைமை தேர்தல் அலுவலகம் 26-ந்தேதி திறப்பு- மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார்
- பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
- ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைகிறது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்படுகிறது.
இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். 26-ந்தேதி (வியாழன்) இந்த அலுவலகத்தை மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும்.






