search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hill people"

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    • வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
    • பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வன அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் இன்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதைக்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், ஆறுகளை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும், குடிநீர், செல்போன் கோபுரம், சமுதாயக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, மருத்துவமனை, வீடு, வேளாண்மை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

    வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

    பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் இரவு அங்கேயே படுத்து தூங்கினர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், நகர செயலாளர் தண்டபாணி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பஞ்சலிங்கம் உட்பட மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உடுமலையில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500 பேர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    • ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை,ஈசல்தட்டு,பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை ,பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய்,நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு,தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அது மட்டுமின்றி ஆடு,மாடு,கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டது. ஆனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்தனர்.மேலும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளை நிலங்களை தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து. இதமான சீதோசன நிலை நிலவுகிறது. அத்துடன் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களும் புத்துணர்வு பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட காத்திருக்கின்றனர்.

    • கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக ங்கள் உள்ளன. வன ப்பகுதியில்உள்ள செட்டில்மெ ண்ட்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

    இவ்வசதிகளை செய்து தருமாறு அவர்கள் வனத்துறையிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள குழிப்பட்டி, மாவடப்பு, புளிய ம்பட்டி, கருமுட்டிஉட்பட மலைவாழ் கிராமங்களில் இருந்து சமவெளிக்கு வர நேரடி இணைப்பு ரோடு இல்லை.கடந்த சிலஆண்டுகளுக்கு முன்தேவனூர்புதுாரில் இருந்து, மயிலாடும்பாறை வழியாகநல்லார் காலனி வரை ரோடுஅமைக்கப்பட்டது.ஆனால்கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கருமுட்டி திட்ட ரோடு பணிகளை மேற்கொள்ள பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரோடு அமைக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல மலைவாழ் கிராமங்களை இணைக்க முடியும்.இத்திட்ட த்தை செயல்படுத்த வேண்டும் என காண்டூர் கால்வாய் பணிகள் நடக்கும் போதே அப்பகுதியினர்அரசை வலியுறுத்தினர்.பலஆண்டு கால போரா ட்டத்துக்குப்பிறகு நபார்டுதிட்டத்தின் கீழ் வறப்பள்ளம் வரை ரோடு அமைக்கப்பட்டது.வறப்ப ள்ளத்தில் பாலம் அமைத்து மலைவாழ் கிராமம் வரை இத்திட்டத்தை முழுமை ப்படுத்தினால் 300க்கும் அதிகமான தோட்டத்து சாளைகளில் வசிக்கும் மக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறுவார்கள்.

    மாவடப்பு உட்பட பல செட்டி ல்மெண்ட்களுக்கு உடுமலை பகுதியிலிருந்து செல்ல வசதி இல்லை. அவசர தேவைக்காக கூட பல கி.மீ., தூரம் சுற்றி வரும் நிலை தவிர்க்கப்பட்டு அவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில்13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
    • விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா என்பவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானை ஒன்று திடீரென வெளிப்பட்டது. இதனால் அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்கள் சென்று வரும் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றுவனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் மின்கம்பங்களினால் யானைகள் இறப்பதை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனைமலை தாலுகாவில், வேட்டைக்காரன்புதுார், அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, காளியாபுரம், கோட்டூர், பெரியபோது ஆகிய கிராமங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் வட்ட நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வனவர் அல்லது வனக்காப்பாளர், போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இதில் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வனங்களில் இருந்து, ஐந்து கி.மீ., வரையுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கண்டறியப்படும் மின்கம்பங்களின் அச்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கண்டறியப்பட வேண்டும்.

    பழுதடைந்த மின்கம்பங்கள், உயரம் குறைவாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் வனங்களுக்குள் செல்லும் மின்கம்பங்கள் என வகைப்பாடு செய்து சம்பந்தப்பட்ட புலப்படத்தில் குறிப்பிடப்பட வேண்டும். கண்டறியப்பட்ட மின்கம்பங்களை மின்வாரியத்தின் வாயிலாக அவற்றின் தன்மைக்கேற்ப அகற்ற அல்லது மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வனப்பகுதிக்குள் செல்லும் மின்கம்பிகளை உயர் மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மின்கம்பங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தல், முள்வேலி அமைத்தல் போன்ற பணிகள் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மின்கம்பிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயர்ரக காப்பு கம்பிகள் மற்றும் உரையிடப்பட்ட கம்பிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மின்கம்பங்களினால் மின்சாரம் கொண்டு செல்வதற்கு பதிலாக மாற்று வழிமுறை அல்லது மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.கிராமங்களில் வட்ட அளவில் தாசில்தார்களும், குறு வட்ட அளவில் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள் தலைமையிலும் பணிகளை ஒருவாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடித்ததை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி செய்து கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக மரம், செடிகள் பசுமை இழந்து காணப்படுகிறது.
    • ஒரு நாள் முழுவதும் மூங்கில் நெல்லை சேகரிக்க வனப்பகுதிக்கு செல்வோம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான மூலிகை செடிகள், கொடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டத்தில் சிறுதானியங்கள் மற்றும் மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இதேபோல் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். வனப்பகுதி மற்றும் விவசாய தோட்டத்தை நம்பியே இவர்களது வாழ்க்கை நடந்து வருகிறது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக மரம், செடிகள் பசுமை இழந்து காணப்படுகிறது.

    மேலும் வனப்பகுதியில் கடுமையான காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து காற்றின் காரணமாக தற்போது மூங்கில் நெல் கீழே விழத்தொடங்கி உள்ளது. இதை சேகரிக்க ஏராளமான மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    சர்க்கரை நோய், புற்று நோய், மஞ்சள் காமாலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் நிறைந்த இந்த மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    வனப்பகுதியை நம்பியே எங்கள் வாழ்க்கை உள்ளது. தற்போது கடுமையான காற்று வீசி வருவதால் 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து மூங்கில் நெல் விழத் தொடங்கி உள்ளது. நாங்கள் இதை சேகரித்து மூங்கில் அரிசியாக பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம். தினமும் சுமார் 3 கிலோ வரை மூங்கில் நெல் சேகரித்து வருகிறோம்.

    பின்னர் நெல்லில் இருந்து மூங்கில் அரிசி எடுத்து பதப்படுத்தி சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகிறோம். வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வெளி இடங்களில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் கிலோ ரூ.120-க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்.

    இதனால் தினமும் ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் மூங்கில் நெல்லை சேகரிக்க வனப்பகுதிக்கு செல்வோம். மறுநாள் நெல்லை பிரித்தெடுத்து அரிசியாக மாற்றி விற்பனை செய்வோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான 12 பசுமை வீடுகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அத்திக்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 பசுமை வீடுகள் (பசுமை வீடு திட்டத்தின் நிதி தலா ரூ.3 லட்சம், ராம்கோ நிறுவன நிதி தலா ரூ.1 லட்சம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்று பசுைம வீடுகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் தான். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். அவர்களை நன்றாக கல்வி பயில செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    பெற்றோர்களாகிய நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே செல்வமாகும். கல்வியின் மூலம் அனைத்தும் பெறலாம். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து இந்த பகுதியில் இருந்து எதிர்காலத்தில் கலெக்டராகவோ, காவல் துறையில் சிறந்த அதிகாரியா கவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்க வேண்டும்.

    தங்கள் வாழ்வா தாரத்திற்கு பசு மாடுகள் வழங்கவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, வட்டாட்சியர் உமாமகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
    • ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.

    உடுமலை : 

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.

    குறிப்பாக குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்தூர்போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.

    இது குறித்து கடந்த 2018ல் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சிறப்பு திட்டத்தின் கீழ் குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில் வேளாண்துறையால் வழங்கப்பட்டன.

    பின்னர், நுண்ணுாட்டச்சத்து உட்பட இடுபொருட்களும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டமும் சில மலைவாழ் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை பகுதிகளிலுள்ள 15 மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்திற்கான தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

    விடுபட்டவர்களுக்கு ஆவணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு பிறகு தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில் பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.அங்குள்ள சிற்றாறுகளிலும் நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தை அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் செயல்படுத்தவும், இந்த சீசனில் சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

    மேலும் அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மானியத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் இல்லாததால் மலைவாழ் கிராமங்களை இத்திட்டங்கள் எட்டவில்லை. தற்போது விளைநிலங்களுக்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜல்லிபட்டி அருகே, ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ராகி, மொச்சை என பல்வேறு சிறுதானிய சாகுபடியில் அம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான விதை, இயற்கை வழி இடுபொருட்கள் மற்றும் ஸ்பிரேயர் உட்பட வேளாண்எந்திரங்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், மனு அளித்துள்ளனர்.மலைப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் சாகுபடிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், சிறுதானிய பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்தால் இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
    • மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

    உடுமலை :

    மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.

    நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களைுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குட்பட்ட உடுமலை வனசரகம் பொறுப்பார் குடில் மலைவாழ் மக்களை சந்தித்து,கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட நக்சல் சிறப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் சார்பாக அப்பகுதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும்,மரக்கன்றுகளை நிறுவனர் உடுமலைடாக்டர் எஸ்.ஏ.ஐ. நெல்சன் வழங்கினார் .உறுப்பினர்கள் சிவலிங்கம்,ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.  

    • வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
    • தேனீ வளர்ப்பு வாயிலாக மலைவாழ் மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பரப்பில், விவசாயம் மேற்கொள்கின்றனர்.மேலும்வடுமாங்காய், சீமாறு புல் சேகரித்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது அப்பகுதி மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் கிராமங்களில் சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாதவனத்தோடு தொடர்புடைய தேனீ வளர்ப்பு வாயிலாக அப்பகுதி மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகம் உதவியுடன், ஆட்டுமலை, பொருப்பாறு, கரட்டுப்பதி கிராமங்களைச்சேர்ந்த 50 பேருக்குதேனீ வளர்ப்பு பயிற்சியும், 30 பேருக்கு, தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், தேனீ வளர்ப்பு பயிற்சியும், உபகரணங்களையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் வாயிலாக நிரந்தர வருவாய் கிடைப்பதுடன், புதிதாக மேற்கொள்ளும் விவசாய சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். பாரம்பரியமாக தேன் சேகரிப்பில் அனுபவம் உள்ளதால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடியும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    ×