search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odugathur"

    • பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 350-கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

    இங்கு 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 48 நாட்களுக்கு முன்பு இருந்து அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பட்டனர்.

    மேலும் தொடந்து, மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த 'ஜாலாமரம்' என்றழைக்கப்படும் மரம், முன்னோர்கள் வைத்து வழிபட்டு வந்த கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், தோலால் செய்யப்பட்ட மேளம் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒரு வாரமாக பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டும் திருவிழா தொங்குமலை கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக, சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்டிருந்த 4 பெரிய மந்தையில் அடைத்து வைத்திருந்தனர்.

    பின்னர், 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறுகட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    இந்த விழாவினைக் காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

    ஆண்களுக்காக 5 நாள் ஒதுக்கப்பட்டு பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாள் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் மங்கையர்களுக்காக கொடுக்கப்படும் மகத்துவமான மரியாதை என கூறி வருகின்றனர்.

    இன்று நடைபெறும் பெண்களுக்கான திருவிழாவில் ஆண்கள் யாரும் பங்கேற்க கூடாது அப்படி பங்கேற்றால் சாமி அவர்களை சும்மா விடாது என்று, அருள் வந்து ஆடிடும் பெண்கள் ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

    ஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா உத்தரவின்பேரில் அமிர்தி வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சேட்டு, சின்னத்துரை, ராமமூர்த்தி ஆகியோர் நேற்று ஒடுகத்தூர் அருகே முள்ளுவாடி கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து புகை வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 3 பேர் இருந்தனர். அவர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் ஓட்டம்பிடித்தனர். வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் ஒருவரை பிடித்தனர்.

    புகைவந்த இடத்தை பார்த்தபோது சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு அரியவகை காட்டுப்பூனையை வேட்டையாடி வைத்திருந்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் முள்ளுவாடி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவருடைய மகன் துரைசாமி (வயது 30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, சாராயம் காய்ச்சுவது, மரங்களை வெட்டுவது ஆகியவற்றில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து துரைசாமியை வனத்துறையினர் கைது செய்து வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். வேட்டையாடப்பட்ட காட்டுப்பூனை, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பி ஓடிய ராஜேந்திரன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×