என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road facilities"

    • எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை என்று அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்கள் பேசியுள்ளனர்.
    • சாசாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா உறுதியளித்தார்.

    மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள காதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் பேசியுள்ள கர்ப்பிணி பெண்கள், எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை. நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைகளை சேறு, சகதி நிறைந்த சாலையில் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எங்கள் கிராமத்திற்கு தார் சாலைகளை அமைக்க வேண்டும்" என்று பேசியிருந்தனர்.

    சமூக ஊடகங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட லீலு ஷா என்பவர் 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை டேக் செய்து இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "மத்தியப் பிரதேசத்திலிருந்து 29 எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சாலை கிடைக்குமா?" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், அப்பகுதியில் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சித்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா ஆகியோர் உறுதியளித்தனர்.

    இது தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, "ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஒரு தேதி உண்டு. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணிகளை முடித்துவிடுவோம். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம்.

    இதுவரை சாலை மோசமாக இருந்த காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்ட்டுள்ளார்களா? தேவைப்பட்டால், எங்களிடம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன. எங்களிடம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். எங்களிடம் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வனத்துறையின் ஆட்சேபனைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய மத்தியபிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், "சமூக ஊடகங்களில் யாராவது ஒரு பதிவை போட்டால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா? பட்ஜெட்டுகள் குறைவாகவே உள்ளன. சமூக ஊடகங்களில் கூறப்படும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்

    • தகவல் அறிந்த, மங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஏம்பலம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் பாலமுருகன் நகரில் 10-வருடங்களுக்கு முன்னர் ஜல்லி போடப்ப ட்டது. மேற்கொண்டு அதன் மேல் தார் போடாமல் விட்டுவிட்டனர். இதனால் தொடர் மழையினாலும், போக்குவரத்தாலும் ஜல்லி பெயர்ந்து விட்டது. இது குறித்த பலமுறை தொகுதி எம்.எல்.ஏ.விடம் புகார் அளிக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏம்பலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, மங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நேரில் சென்று, விரைவில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஏம்பலம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    ×