என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural land"

    • நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.

    அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.

    தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • பொன்னானியில் ஆறு செல்கிறது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே பொன்னானி, சக்கரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னானியில் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது அருகே பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னானி ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் ெபாக்லைன் எந்திரம் மூலம் ஆறு தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் பொன்னானியில் இருந்து அம்மங்காவு செல்லும் சாலையில் பாலம் அருகே சக்கரைகுளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தடுப்புச்சுவர் அதே பகுதியில் ஆதிவாசி காலனி இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பலத்த மழை பெய்யும் சமயங்களில் காலனி உள்பட கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கும் நிலை காணப்படுகிறது.

    • மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.
    • இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே மைக்கேல் பாளையம் ஊராட்சி பாலகுட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (50). விவசாயி. இவருக்கு 8 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பாலக்குட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணத்தடி மலை அடிவார பகுதி பகுதியில் இருந்து இரவு 10-க்கும் மேற்பட்ட மலை மாடுகள் ராசு என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த கூட்டத்தை பார்த்த அவரது வளர்ப்பு நாய்கள் குறைத்தன. இதனை பார்த்து வெளியே வந்த ராசு அந்த மலை மாடுகளை அங்கிருந்து விரட்டி விட்டார்.

    பின்னர் அங்கு இருந்து சென்ற மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.

    உடனடியாக ராசு மற்றும் கந்தவேல் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உதவியோடு அந்த மாடுகளை விரட்டி கந்தவேலின் தோட்டத்தில் கட்டி வைக்கப் பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.

    அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இவ்வாறு மாடுகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக பட்டியல் கட்டி வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    • தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி, சேர்ந்தமங்கலம் மற்றும் புன்னக்காயல் ஆகிய கிராமங்களின் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டுவரும் தடுப்பணையால் அருகில் உள்ள சேர்ந்தமங்கலம், கைலாசப்புரம், ஆத்தூர், புன்னக்காயல், ராமசந்திரபுரம் மற்றும் முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.

    மேலும், தடுப்பணையில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டும்மல்லாமல், கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார். ஆய்வின் போது செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநில கோட்டம், நெல்லை) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து,உதவிபொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது.

    இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு மற்ற விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அதேபோல் சிப்காட் பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட குட்டப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2 வருடங்களாக சிலர் அனுமதி யின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இத னால் அனுமதியின்றி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்க ராஜ், மாசு கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்ட ப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள்.

    அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவசாயி களிடம் கூறும் போது, இனி மேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகள் கொட்டா மல் இருப்பத ற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    • எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது.
    • ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி மற்றும் எம்.செட்டிப்பட்டி ஆகிய கிராம எல்லைக்கு உட்பட்ட பாப்பாங் காட்டூர், பஞ்சாங்கரடு பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இந்த பகுதியில் நாங்கள் பயன்படுத்தி வந்த ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    இதனால் நாங்கள் விளைவித்த பொருட்களை எடுத்துச் செல்ல முடிய வில்லை. பள்ளி குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் அவ சர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    சாலையை அளவீடு செய்து தார் சாலை அமைத்து தரும்படி பஞ்சா யத்து தலைவர், தாசில்தார், சப்-கலெக்டர், கலெக்டர், முதல்-அமைச்சரின் நேரடி முகவரி என 3 ஆண்டு களுக்கும் மேலாக மனுக்கள் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சேலம் வரும் முதல்-அமைச்சரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கவும், பள்ளி செல்லும் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பா மல் போராட்டத்தில் ஈடுப டும் நிலைக்கு அதிகாரிகளால் தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
    • கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.மதுபான கடைகள் அதிகரிப்பால், மதுபானம் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்து வருகிறது. போதை ஒரு தீய பழக்கம் என்பது போய் தற்பொழுது இளைஞர்களிடையே அது "பேஷன்" ஆகி வருகிறது. இந்த நிலையில், சிலர் மதுபானங்களை வாங்கி வந்து வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்கள் அருகே குடித்துவிட்டு, அங்கேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொள்ளும் போது உடைந்த கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் மேய்ச்சல் நிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணுவதால் அவற்றின் வயிற்றில் சிக்கி கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து திறந்தவெளிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் மது அருந்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
    • இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆமூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகில் ஆறு ஒன்று உள்ளது. இந்நிலை யில் ஆறுமுகம் தனது விவசாய நிலத்தின் அருகில் உள்ள ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.

    ஆறுமுகம் விவசாய நிலத்திற்கு பக்கத்து விவசா ய நிலத்தின் உரிமையாளர் கண்ணன். ஆறுமுகம் போ ட்ட போர் பக்கத்திலேயே கண்ணனும் போர் போட முயன்று ள்ளார். இதனால் ஆறுமு கம் கண்ணனிடம் சென்று நான் தான் இங்கு போர் போட்டுள்ளேன் இதன் அருகே நீ போர் போடாமல் கொஞ்சம் தள்ளி சென்று போர் போடு என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. 

    இதனையடுத்து விவசாய நிலத்தில் இருந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டனை ஆகிய 3 பேரையும் கண்ணன், அய்ய னார், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டன் ஆகி யோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கண்ணியம்மாள் திருவெ ண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகார் கொடு த்தார். புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்திகேயன், ஆறுமு கம் குடும்பத்தை தாக்கிய கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அய்யனார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய கண்ணன் மற்றும் கிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
    • அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த விஜயமாம்பாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் நரசிம்மலு நாயுடு. கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அப்பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர்.

    இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து 130 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தோண்டி எடுக்கப்பட்ட முதியவர் உடல் பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

    மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    அவர்கள் மேலும் கூறியதாவது:

    தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்.
    • 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து பீய்த்து அடித்த எரிவாயு.

    ஆந்திராவில் விளை நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 15 மீட்டர் உயரத்திற்கு, எரிவாயு பீய்ச்சி அடித்து வெளியேறியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இருந்து இதுவரை தண்ணீர் மட்டுமே வந்த நிலையில், திடீரென எரிவாயு வந்ததாக விவசாயிகள் தகவல் வெளியானது.

    சம்பவம் குறித்து, ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசராணை நடைபெற்று வருகிறது.

    • மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயமடைந்த பவித்திர சந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்கலூரில் உள்ள கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உத்தம்கட்டா (வயது22), பவித்தரசந்திரன் (25) ஆகிய 2 பேரும் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும், நேற்றிரவு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு, அருகில் உள்ள ரூபி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வந்தபோது, வயலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் உத்தம்கட்டா தெரியாமல் சிக்கினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை தடுக்க முயன்ற பவித்திரசந்திரன் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

    இதுகுறித்து கோழிப்பண்ணைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு அபிரகாம்கட்டா (45) என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    அப்போது மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சார வேலியில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×