search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public opposition to"

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட சின்னான் குட்டை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய விளை நிலங்களின் அருகே கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி களை பயன்படுத்தி பாறை களை வெடித்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகி வருகின்ற னர்.

    வெடிச்சத்தம் கேட்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் அதிக சத்தம் கார ணமாக கால்நடை களுக்கு மலட்டு த்தன்மை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டு கின்றனர்.

    மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழ த்திற்கு பாறைகளை வெடி த்தெடுப்பதால் அப்பகுதி யில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்து ளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ள்ளது. கற்களை அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிக ளால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடை ந்துள்ளது.

    கல்குவாரிக்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் குவாரி உரிமையாளர்க ளுக்கு ஆதரவாக பாலம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே உள்ள கல்குவாரிக்கு அருகே மீண்டும் ஒரு புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இது சம்பந்தமாக காரா ப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கி னார். சத்தியமங்கலம் வட்டார தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாளையம், மாரம்பா ளையம் புதூர், வகுத்து கவுண்டன்புதூர், நடுப்பாளையம், கொமர பாளையம், தேவம்பா ளை யம், சின்னான்குட்டை கோப்பம்பாளையம், கண்டி சாலை, காரப்பாடி, கோட்ட பாளையம், பாறைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயக் கூலிகள் வசித்து வருகிறோம்.

    எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குவதாக கூறப்படு கிறது.

    எனவே மீண்டும் இப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயிகளின் நலன் கருதி அனுமதி வழங்கக் கூடாது என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கார ப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமசாமி, விவசாய சங்க நிர்வாகிகள் மோகன் குமார். சுப்பிரமணி.சதீஷ்குமார். முத்துக்குமார். பொன்னுசாமி, சண்முகம், வார்டு உறுப்பினர் லோக நாயகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் விவசாயி கள் பலர் கலந்து கொண்ட னர்.

    • கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது.

    இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு மற்ற விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அதேபோல் சிப்காட் பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட குட்டப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2 வருடங்களாக சிலர் அனுமதி யின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இத னால் அனுமதியின்றி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்க ராஜ், மாசு கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்ட ப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள்.

    அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவசாயி களிடம் கூறும் போது, இனி மேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகள் கொட்டா மல் இருப்பத ற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    ×