search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய நிலங்கள்"

    DPI0115122023: கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு

    தேன்கனிக்கோட்டை,டிச.15-

    கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு வன பகுதிக்கு சென்றுள்ளன. வழி நெடுகிலும் ராகி, தக்காளி, பீன்ஸ், கோஸ், தென்னை, மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தவாறு செல்வதால், விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள் கூட்டத்தை, கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறையினர் மாநில எல்லையான தளி, ஜவளகிரி வனப்பகுதியிலே முகாமிட்டு விரட்டி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் ஜவளகிரி, நொகனூர், தேன்கனிககோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக, ஓசூர் சானமாவு வனப்பகுதி, போடூர் பள்ளம் வனப்ப குதி வரை சென்றுள்ளன. இதன்மூலம் அதிகளவில் பயிர்கள் சேதமடைந் துள்ளது.

    இதனால், ராகி மற்றும் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுக ளாக காட்டு யானைகள் கூட்டத்தை மாநில எல்லை பகுதியிலே தடுத்து நிறுத் திய நிலையில், தற்போது வனத்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஓசூர் வரை செல்லும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுக்குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இணக்கத்துடன் கருத்துக்களை கேட்டு, வனத்துறை அதிகாரிகள் பணியாற்றாமல் அலட்சியப் போக்குடன் இருப்பதே, யானைகள் அட்டகாசத்திற்கு காரணம். இரவு நேரங்களில் பயிர்களை காவல் காக்க செல்லும் விவசாயிகளுக்கு டார்ச் லைட், பட்டாசுகள் போன்றவற்றை வழங்குவதில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன், மரக்கட்டா வனப்பகுதியில் வனத்துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அலட்சியப் போக்கு காரணமாகவும். யானை தாக்கி ஒரு வாலிபர் உயிரிழந்தார் எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும், பயிர் சேதங்களை தடுக்கவும், யானைகள்-மனித மோதல்களை தவிர்க்கவும், பேவநத்தம் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 க்கும் மேற்பட்ட யானைகளை, உடனடியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
    • விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.

    இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.

    இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    • இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
    • கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.மதுபான கடைகள் அதிகரிப்பால், மதுபானம் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்து வருகிறது. போதை ஒரு தீய பழக்கம் என்பது போய் தற்பொழுது இளைஞர்களிடையே அது "பேஷன்" ஆகி வருகிறது. இந்த நிலையில், சிலர் மதுபானங்களை வாங்கி வந்து வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்கள் அருகே குடித்துவிட்டு, அங்கேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொள்ளும் போது உடைந்த கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் மேய்ச்சல் நிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணுவதால் அவற்றின் வயிற்றில் சிக்கி கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து திறந்தவெளிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் மது அருந்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிகவளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
    • போராட்டகாரர்கள் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இடையிருப்பு வருவாய் கிராமத்தில் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் முக்கிய பாசன வாய்க்கால், பாப்பா வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு உள்பட பல கிராமங்களில் உள்ள 700 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிக வளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். பாப்பா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், முழுமையாக தூர்வாரி தரக்கோரியும் விவசாயிகள், கிராமமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாபநாசம், சாலியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், டிஎஸ்பி பூரணி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டகாரர்கள்பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    தகவல் அறிந்த அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாசன வாய்க்கா லில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வருவாய்து றையினர் பாசன வாய்க்காலை சர்வே செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×