search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural lands"

    • பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
    • விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.

    இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.

    இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு
    • வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக மிக கனமழை பெய்தது.

     இதனால் தாழ்வான பகுதி உள்ள நிலங்களிலும் சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படு கிறது. தொடர்ந்து இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்த மழையின் காரண மாக ஏரி குளங்கள் பெரும்பாலானவை வேகமாக நிரம்பி வழிகிறது.

    தாழ்வான பகுதி உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நிலத்தில் புகுந்த தண்ணீர் வடிய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் பயிர்கள் சேதம டைந்துள்ளது. முறையாக வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    குறிப்பாக பாகூர் விவ சாய நிலத்திற்கு குறுக்கில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை உயரமாகவும் பாலங்களும் கட்டப்பட்டுள்ளதால் தற்பொழுது பெய்த மழை நீர் வடிய போதிய வசதி இல்லாமல் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்து விளைநிலங்களில் தேங்கி தொடர்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன் தலைமை பொறியாளர் வீரசெல்வம் மற்றும் பொறி யாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்ய இன்று காலை பாகூர் வந்தனர்.

    பாகூர் - கன்னியகோயில் ரோட்டின் ஓரத்தில் இருந்த சித்தேரி வாய்க்கால் உடைந்து நெல் வயலில் தண்ணீர் புதுந்து இருப்பதை பார்த்தார்.

    இது சம்பந்தமாக புறவழிச் சாலை அமைக்கும் அதிகாரியிடம் பாகூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு ஏற்றவாறு பாலங்களும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

    தற்பொழுது ஏற்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அந்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம், புதுவையில் கடந்த 2001-ம் ஆண்டு விவசாய நிலங்களை மனைகளாக்குவதை தடுக்க ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதன்படி அரசின் அனுமதி யில்லாமல் விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடியாது.

    ஆனால் புதுவையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக விவசாய நிலங்கள் தொடர்ந்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசின் நகரமைப்பு குழுமம், பெரா ஆகியவற்றின் அனுமதியும் பெறப்படுவதில்லை. ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.

    ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பதிவு செய்கின்றனர். இந்த லஞ்சம் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை பிரித்து கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு பல முறை எடுத்துச்சென்றுள்ளோம்.

    நேற்றைய தினம் பாகூரை சேர்ந்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியுள்ளனர்.

    வில்லியனூரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை கோரி அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுத உள்ளோம்.

    வில்லியனூரில் சதுர அடி நிலம் மார்க்கெட்டில் ரூ.2 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் அரசு மதிப்பீடு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு மதிப்பை மார்க்கெட் விலைக்கு நிகராக உயர்த்துகின்றனர். புதுவையில் பல ஆண்டாக அரசு மதிப்பை உயர்த்தவில்லை. நிலத்தின் மதிப்பையும் அரசு உயர்த்த வேண்டும். அனுமதியின்றி விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றுள்ளதா? என கேட்ட போது,

    அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், முடிவும், அறிவிப்புமே எங்கள் வேதவாக்கு என்று கூறினார்.

    • விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
    • வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (வயது52). இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வாழை, மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பணப்பயிறுகளை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்து வருகிறார். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து சண்முகப்பிரியா, மேலாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) விஜயலட்சுமி ஆகியோர் ராமரின் மிளகாய் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பாக்குவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்கள், ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து வேளாண்மை திட்டங்களை குறித்து ஆலோசனை வழங்கினர். கமுதி வேளாண்மை வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • துளசி தோப்பு பகுதியில் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
    • இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்களை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது துளசி தோப்பு.

    காட்டுயானை அட்டகாசம்

    இப்பகுதியில் விவசாயிகள் தென்னை, மாமரங்கள், கிழங்கு வகைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக துளசி தோப்பு பகுதியை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு தென்னைமரங்கள் உள்ளிட்டவற்றை முறித்து சேதப்படுத்தி வருகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    விவசாயிகள் கோரிக்கை

    முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த அழகன் என்ற விவசாயிக்கு சொந்தமான விளை நிலத்தில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை அந்த விவசாயி நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.

    ஏற்கனவே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் காட்டில் இருந்து இறங்கிய கரடி ஒன்று நேற்று 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

    எனவே துளசிதோப்பு பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் இறங்காத வாறு மின்வேலிகளை அமைக்கவும், வெளியில் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டுப் பகுதிக்கு விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    • இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வட பொன் பரப்பி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, சேகர், கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள். இவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காணங்காடு எல்லைக்குட்பட்ட பகுதி யில் விவசாயிகள் விவ சாயத்திற்கு பயன்படுத்தும் மின்மோட்டோர்களின் விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாசனம் செய்ய முடியாமல் செய்வதறியாது பாதிப்படைந்துள்ளனர். திருடி சென்ற மின் வயர்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வடபொன் பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாய நிலங்களில் மின் வயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாய நிலங்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கிறார்கள்.
    • சோளத்தட்டுகள் பொதுவாக வளர்வதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை.

    காங்கயம்:

    கால்நடைகளுக்கு தீவன சோளம், தீவன மக்காச்சோளம், கொழுக்கட்டை, புல், கம்பு, நேப்பியர் புல், எருமைப்புல் போன்றவை பயறு வகை அல்லாத புல் வகையாகும். இந்த வகையில் சோளத்தட்டுகள் கால்நடைகளுக்கு மழை பெய்யாத வறட்சியான காலங்களில் அளிக்கப்படும் முக்கிய தீவனம் ஆகும்.

    விவசாயிகள் மழை பெய்யும் காலங்களில் தங்கள் விவசாய நிலங்களில் உளவு செய்து, அதில் கால்நடைகளின் முக்கிய தீவனமான சோளம் விதைக்கிறார்கள். பின்பு நன்கு வளர்ந்த பின்பு அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்த சோளத்தட்டுகளை போர் அமைத்து சேமித்து வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கறவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் தங்கள் ஈரப்பதமான நிலங்களில் உழவு செய்து சோளங்களை பயிரிட்டனர். தற்போது இந்த சோளங்கள் நன்கு செழித்து சோளத்தட்டுகளாக வளரத்தொடங்கியுள்ளது. இதனால் சோளங்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், சோளத்தட்டுகள் பொதுவாக வளர்வதற்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை. மழை பெய்து நிலம் ஈரப்பதம் ஆனாலே சோளம் தானாக வளர்ந்து விடும். மேலும் ஓரளவு வளர்ந்த பின்பு அவ்வப்போது மழை பெய்தால் சோளத்தட்டுகள் நன்கு செழித்து வளர ஆரம்பித்துவிடும். இதனால் கால்நடைகளுக்கு தீவனப்பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் இந்த சோளத்தட்டுகளை வைத்து ஓரளவு சமாளித்து விடமுடியும் என்று விவசாயிகள் கூறினர்.

    • ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிகவளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
    • போராட்டகாரர்கள் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இடையிருப்பு வருவாய் கிராமத்தில் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் முக்கிய பாசன வாய்க்கால், பாப்பா வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு உள்பட பல கிராமங்களில் உள்ள 700 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிக வளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். பாப்பா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், முழுமையாக தூர்வாரி தரக்கோரியும் விவசாயிகள், கிராமமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாபநாசம், சாலியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், டிஎஸ்பி பூரணி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டகாரர்கள்பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    தகவல் அறிந்த அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாசன வாய்க்கா லில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வருவாய்து றையினர் பாசன வாய்க்காலை சர்வே செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac
    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் குற்றம் சாட்டும் டாஸ்மாக் மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது? என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். #Agriculturallands #Tasmac
    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்காக அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. #GreenWayRoad
    சென்னை:

    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழி பசுமை சாலை பணிகள் தீவிரம் அடைய தொடங்கியுள்ளன. 277 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை மிக மிக நவீனமாக சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. இதற்காகவே மத்திய அரசு இந்த சாலை திட்டத்துக்கு ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக இந்த பாதை உருவாக உள்ளது. மொத்தம் 14 தாலுக்காக்களில் உள்ள 159 கிராமங்களை தொட்டுக் கொண்டு இந்த 8 வழி பசுமை சாலை கடந்து செல்லும்.

    இந்த சாலை காரணமாக சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நேரம் பாதியாக குறையும். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியும்.

    இதன் காரணமாக எரிபொருள் சிக்கனம், நேர சிக்கனம் உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். குறிப்பாக சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாலை மிகவும் கைகொடுக்கும் என்று மத்திய- மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த 8 வழி பசுமை சாலைக்கான நிலம் ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்டது. 5 மாவட்டங்களிலும் எந்தெந்த பகுதி வழியாக இந்த சாலை செல்லும் என்பது ஏற்கனவே அறிவிக்கைகள் மூலம் கூறப்பட்டு விட்டது.

    தேசிய நெடுஞ்சாலை 179-ஏ, 179-பி என்று இந்த சாலைக்கு பெயரிடப்பட உள்ளது. இந்த சாலைக்கு 5 மாவட்டங்களில் இருந்தும் அரசு நிலங்களும், தனியார் நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.


    அதிகபட்சமாக திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு மாவட்டங்களில் இருந்தும் வனத்துறைக்கு சொந்தமான 9 இடங்களில் இருந்து நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 74 கிராமங்களை ஊடுருவியபடி இந்த சாலை அமைய உள்ளது. இதனால் 74 கிராம மக்களும் கணிசமான நிலத்தை இழக்கக்கூடும்.

    மத்திய-மாநில அரசுகளின் அறிவிக்கையின் படி இந்த திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர் பகுதிகளில் இருந்து அதிகப்படியான புறம்போக்கு நிலங்கள் பயன்படுத்தப்படும்.

    8 வழி சாலை திட்டத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர தனியார் நிலங்களும் அதிக அளவில் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக விவசாய நிலங்கள் சில ஆயிரம் ஏக்கர்கள் பறிபோக உள்ளன. மொத்தம் 7 ஆயிரத்து 237 பேருக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இதில் சுமார் 6 ஆயிரம் பேர் முழுக்க முழுக்க அந்த விவசாய நிலங்களையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகள் இந்த பாதிப்பை ஏற்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதில் இந்த சாலை வழியாக தொழில்கள் மேம்படும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக அலுமினியம், சிலிக்கான், கண்ணாடி, செராமிக், சிமெண்டு தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று கணக்கிட்டுள்ளனர்.

    தொழில் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகையை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து கொடுக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரு.3 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிலத்தை பறிகொடுக்கும் உரிமையாளர்கள் அதற்கான சட்டப்பிரிவு 3சி(1) பிரிவின் கீழ் இழப்பு தொகையை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட 21 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் கையகப்படுத்துதல்), தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் விண்ணப்பித்து தங்களது ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு விவசாயிகளின் நிலத்திற்கு ஏற்க இழப்பீடு தொகை 2 மடங்கு அதிகமாக கொடுப்பதா? அல்லது 3 மடங்கு அதிகமாக கொடுப்பதா? என்பது பற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    ஆனால் நிலத்தை இழக்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் இழப்பீடு தொகை பெற விரும்பவில்லை. தங்களது நிலத்தையும் விட்டுக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. வாழ்வாதார பூமியாக இருப்பதால் மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    ஆனால் சென்னை- சேலம் இடையே செயற்கை கோள் மூலம் 8 வழி பசுமை சாலைக்கான இடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதால் இந்த வழித்தடத்தை மாற்ற இயலாது என்று அரசு கூறியுள்ளது.  #GreenWayRoad
    ×