search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
    X

    விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

    • விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
    • வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (வயது52). இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வாழை, மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பணப்பயிறுகளை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்து வருகிறார். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து சண்முகப்பிரியா, மேலாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) விஜயலட்சுமி ஆகியோர் ராமரின் மிளகாய் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பாக்குவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்கள், ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து வேளாண்மை திட்டங்களை குறித்து ஆலோசனை வழங்கினர். கமுதி வேளாண்மை வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×