search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே விவசாய நிலத்தில் போர் போடுவதில் இரு தரப்பினரிடையே மோதல்: 4 பேர் மீது வழக்குபதிவு
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே விவசாய நிலத்தில் போர் போடுவதில் இரு தரப்பினரிடையே மோதல்: 4 பேர் மீது வழக்குபதிவு

    • ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
    • இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆமூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகில் ஆறு ஒன்று உள்ளது. இந்நிலை யில் ஆறுமுகம் தனது விவசாய நிலத்தின் அருகில் உள்ள ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.

    ஆறுமுகம் விவசாய நிலத்திற்கு பக்கத்து விவசா ய நிலத்தின் உரிமையாளர் கண்ணன். ஆறுமுகம் போ ட்ட போர் பக்கத்திலேயே கண்ணனும் போர் போட முயன்று ள்ளார். இதனால் ஆறுமு கம் கண்ணனிடம் சென்று நான் தான் இங்கு போர் போட்டுள்ளேன் இதன் அருகே நீ போர் போடாமல் கொஞ்சம் தள்ளி சென்று போர் போடு என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.

    இதனையடுத்து விவசாய நிலத்தில் இருந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டனை ஆகிய 3 பேரையும் கண்ணன், அய்ய னார், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டன் ஆகி யோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கண்ணியம்மாள் திருவெ ண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகார் கொடு த்தார். புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்திகேயன், ஆறுமு கம் குடும்பத்தை தாக்கிய கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அய்யனார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய கண்ணன் மற்றும் கிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×