search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Residences"

    • ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து மறியல்.
    • கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி, கண்ணன்மேடு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து பாமணி இ.சி.ஆர். சாலையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோதி பாஸ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பி சுந்தர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறியில் ஈடுப்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காமராஜ் எம்.எல்.ஏ. சந்திப்பு

    இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி.சி. சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×