search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice crops"

    • சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்படக்கூடும்.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை என்பது பெய்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமானது முதல் கன மழை என்பது பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக சம்பா நெல் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெய்த மழையின் கார ணமாக நெல் பயிர்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்தால் ஒட்டுமொத்த நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
    • ஏக்கருக்கு 5 சதவீதம் 600 மில்லி வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நெற்பயிரில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினால் ஆங்காங்கே இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.

    நெல் வயல்களில் வளரும் அல்லது தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கிறது. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு புழுக்கள் அதன் உள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் இருக்கும்போது தழைச்சத்து உரம் இடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் புழுக்கள் பச்சையான நிறத்திலும் ஒளி கசியும் தன்மை கொண்டும், முன் மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும் பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் வரை கூட்டுக் புழுக்களாக இருக்கும். அந்து பூச்சியான முதிர் பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும்.

    நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல், களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு அசியேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணெய் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மழைகாலத்தில் நெற்பயிர்களை பாதுகாக்கலாம்.
    • மகசூல் இழப்பை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்ச ரிக்கை நடவடி க்கை குறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-

    தற்போது பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ங்களிலும் மிதமானது முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள விவசாயிகள் சில பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

    மழைநீர் சூழ்ந்துள்ள நெல் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும். நீரில் மூழ்கிய நெற்பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்து வயல்களில் தண்ணீர் வடிந்தவுடன் இடவேண்டும். மேலும் போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து மகசூல் இழப்பை தவிர்த்திட கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
    • நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

    மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மழைகாலங்களில் தண்ணீர் வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • மேலும், தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் முதல் கொத்தமங்கலம் ஊராட்சி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிக்கொண்டான் ஆறு செல்கிறது.

    இந்த ஆற்றில் கட்டுமாவடி ஊராட்சி ஆற்றங்கரை தெரு முதல் துண்டம் நீர் தேக்கம் வரை ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

    மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து ள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்க வும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமி த்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோ ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், கோட்டை பகுதி புண்ணியமூர்த்தி,

    கரந்தை பகுதி பஞ்சு, தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் நாகராஜன், மருத்துவக்கல்லூரி பகுதி மனோகர், கீழவாசல் பகுதி சதீஷ்குமார், தெற்கு ஒன்றியம் ஸ்டாலின் செல்வராஜ், 5-வது வட்ட செயலாளர் சம்பத், மருத்துவக்கல்லூரி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாணவர் அணி செயலாளர் ஜவகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.

    • செம்பனேரி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பயிர்கள் கருக தொடங்கின.

    நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகினர்.

    குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.

    மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.

    எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.

    உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேளதாளத்துடன் எடுத்து வந்தனர்.

    கும்பகோணம்:

    தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேள தாளத்துடன் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.

    தலைமை தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக் காரர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
    • தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 16-ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்திலும் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

    ஆனால் மாவட்டத்தில் சில பகுதிகளில் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராததால் குறுவை பயிர்கள் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தஞ்சை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் மட்டும் 50 ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த பகுதிக்கு தென் பெரம்பூரில் இருந்து ஜம்பு காவேரியில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஜம்பு காவேரியில் இருந்து தண்ணீர் வரவில்லை.

    இதனால் நடவு நட்டு 20 நாட்களான குறுவை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    தண்ணீர் இல்லாததால் வயல்களில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து வேதனை அடைந்த அப்பகுதி விவசாயி முனியாண்டி என்பவர் காய்ந்த பயிர்கள் மத்தியில் சோகத்துடன் படுத்து கிடக்கும் காட்சி மற்ற விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இது குறித்து விவசாயி முனியாண்டி கூறும் போது, நான் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து நடவு செய்தேன். கடந்த 20 நாட்களாக ஜம்பு காவேரியில் தண்ணீர் வரவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள் .

    கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதை பார்க்க வேதனையாக உள்ளது.

    வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வயல்களில் படுத்து உள்ளேன்.

    உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகி வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி வருவாய்கிரா மத்திற்கு உட்பட்ட கள்ளிமேடு, மற்றும் ராராமுத்திர கோட்டை பகுதியில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் கோடையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் நெற்பயிர்கள் வயலிலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கிய நிலையில் அழுகி சேதமடைந்து வருகிறது.

    இந்த நெற்பயிர்கள் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழுகி சேதமடைந்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயி ர்களை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் மழையால் சூறை காற்றால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு உரிய நிவாரனம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    • கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர்.
    • கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.   இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.     இதுகுறித்து அந்தப் பகுதி யைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறியதாவது:-

    கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும்   இது குறித்து தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு கூறியதாவது:-  மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத் தலின்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளின் விவரங்க ளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தொடர் மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் நின்ற வாறு ஒரு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் நகல் ஆகியவற்றுடன் விவசாயிகள் நிவாரண மனுவை இணைத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் தங்களது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை அந்தந்த பருவங்களில் பயிர் காப்பீடு செய்து வருகின்ற னர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒவ்வொரு பயி ருக்கும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படை யில் பயிர்களுக்கு ஏற்ற வாறும், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இதில் அந்த குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் பயிர் பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கும் சில சமயங்களில் பயிர் சாகுபடி செய்யாத விவசாயி களுக்கும் இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே வரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் விதத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கூறு கின்றனர்.

    • விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • காட்டுபன்றிகள் தொடர்ந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகன் (41). விவசாயி.

    இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு செல்லும் வழியில் பாழம்பத்து பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் இவரது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 1 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை நாசம் செய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனைதொடர்ந்து விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×