search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta"

    • மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
    • எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.

    டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.

    மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.

    எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.

    பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 1827 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2128 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 67.21 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 67.39 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.50 டி.எம்.சி.யாக உள்ளது.

    • தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
    • டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ,பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும்.

    இதில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டுக்கான மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

    அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    கல்லணைக்கு காவிரி நீர் நாளை இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    வயல்களில் உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்ட ங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

    இதில், டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வளத்துறை ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
    • கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது.

    பூதலூர்:

    தஞ்சை உள்ளிட்ட 11காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு ரூ 80 கோடிக்கு 4004 கிமீ நீரை 636 பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடி மதிப்பீட்டில் 1068.45 கிமீ தொலைவிற்கு நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடியில் 6 கோட்டங்களில் 189 பணிகள் மேற்கொள்ளப்படும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27.50 லட்சம் ஆகும். ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ளே பொக்ளின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அமைச்சர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்கு ஏதுவாக ஆனந்த காவேரி வாய்க்காலில் 100மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

    பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளிடம் கூறியதாவது. காவிரி டெல்டா 12 மாவட்டங்களுக்கு தூர் வாரும் பணிகளுக்காக ரூ90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    எல்லா வேலைகளையும் ரூ90 கோடியில் செய்ய இயலாது .எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை எடுத்து செயல்படுத்தப்படும். இங்கே தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஆனந்த காவேரி வாய்க்கால் தூர் வாரரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படஉள்ளது. தூர்வாரம்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள், இதற்கு மேலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.

    தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .அதனால் தாமதம் இன்றி விரைவாகவே பணிகள் நடைபெறும் .முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது என்று கூறுவது நியாயமானது.

    அதை சரி செய்வதற்கு என்ன வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுது கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமமுள்ளதாக விவசாயி ஒருவர் கேட்ட பொழுது இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த நாளில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார் என்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் , தலைமை கொறடா கோவி செழியன், எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், பூண்டி கலைவாணன் , அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர்சண் ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்.

    பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன்,மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தூர் வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க கண்காணிப்பு செயலியின் செயல் முறையை கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.

    • இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
    • தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நட்டு ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதக்கிறது.

    இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.

    தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது.

    மீண்டும் புதிதாக செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. #Rain

    தஞ்சாவூர்:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை - வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், உள்பட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி சென்றது.

    புயல் வந்து சென்றதால் வீடுகள், மரங்கள் சேதமாகி பெரும் அழிவை சந்தித்தது. இதனால் மக்களின் அன்றாட பணி பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் இன்று முதல் வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி வட தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு டெல்டா பகுதி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஆனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் இருள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு லேசான மழை பெய்து அது பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் மாலை வரை மழை வரவில்லை.

    பின்னர் திடீரென லேசான தூரல் விழுந்தது. இரவு வரை லேசான மழை நீடித்து கொண்டே இருந்தது. இன்று காலையுமம் லேசான மழை பெய்தது. பின்னர் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் நேற்று மாலை முதலே லேசான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் லேசான மழை பெய்தது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பழையாறு, திருவங்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்தது. இதைத் தொடர்ந்து திருமருகல் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திட்டச்சேரி, திருச்சங்காட்டங்குடி, மருங்கூர், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே லேசான மழை பெய்தது.

    இன்று காலை பலத்த மழையாக பெய்தது. மேலும் இன்னமும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் எந்த நேரமும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கஜா புயலினால் தங்கள் வீடுகளை இழுந்து நடு தெருவில் நின்று கொண்டிருக்கும் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் தற்போது புதிய காற்றழுத்த மண்டலத்தால் பெய்து வரும் மழை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் மக்கள் முன் கூட்டியே அத்தியாவசிய பொருட்கள் பால், மெழுகுவர்த்தி, உணவு பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி இருப்பு வைத்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  #Rain

    நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut
    சென்னை:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில் 5 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் 1வது நிலை 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது நிலை 1-வது அலகில் 600 மெகாவாட்டும் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2-வது நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. மொத்தம் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.

    தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 14,200 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 2,500 மெகாவாட் அளவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு நிலவுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேர மின் வெட்டு நிலவி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இரவு 3 மணி நேரமும், பகலில் 2 மணி நேரமும் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. நகர் பகுதியில் இரவில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைபடுகிறது. இரவிலும் மின்தடை செய்யப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் பகலில் 3 முறையும், இரவில் 2 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

    மதுரையில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பகல் வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக அரிசி ஆலைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன் கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி கூடங்களில் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மின் வெட்டு நிலவுகிறது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மணிக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மின்சாரம் நிறுத்தம் என்ற பெயரில் கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, வெ.முத்தம்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் 2 நாட்கள் மின் தடை என்று அறிவித்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். எனவே மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Coalshortage #Powercut
    டெல்டா மாவட்டத்தில் கடைமடை வரை பாய்ந்து வந்த காவிரி ஆறு, இன்று காலை பூம்புகார் கடலில் கலந்தது. #cauvery

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப் படி கல்லணையில் இருந்து 29807 கன அடி வீதம் வினாடிக்கு திறந்து விடப்படுகிறது. இதில் காவிரிக்கு 9512 கன அடியும், வெண்ணாற்றில் 9507 கன அடியும், கல்லணை கால்வாயில் 501 கன அடியும் , கொள்ளிடத்தில் 10, 287 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை அடுத்த கல்விபாயன்பேட்டையில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று கல்லணை கால்வாயிலில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 501 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

    தற்போது டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கடைமடை வரை சென்று விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் செல்ல வில்லை.இதனால் டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து இன்று காலை பாசனத்துக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கிருந்து வெண்ணாற்றுக்கு 2032 கன அடியும், கோரையாற்றில் 2406 கன அடியும் பாமினி ஆற்றில் 654 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 7½ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவாரூர் பாண்டவையாறில் முசிறியம் படுகையணையில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை. காவனூர் பகுதியில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்று தண்ணீர் சீர்காழியை அடுத்த மேலையூர் கதவணைக்கு இன்று காலை வந்தது. இதையொட்டி அப்பகுதி விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். தற்போது கொள்ளிடத்தில் அதிகப்படியான தண்ணீர் 10287 கன அடி திறப்பதால் கடலில் சென்று வீணாகுகிறது.

    சீர்காழியை அடுத்த பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் நேற்று முதலே கலந்து வருகிறது. அதே நேரத்தில் நாகை மாவட்டத்தில் இன்னும் ஒரு சில கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேர வில்லை. இதற்கிடையே கடைமடை வரை பாய்ந்து வந்த காவிரி ஆறு, இன்று காலை பூம்புகார் கடலில் கலந்தது. காவிரி கடலில் சங்கமிப்பதை அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர். #cauvery

    ×