என் மலர்
நீங்கள் தேடியது "டெல்டா"
- 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
- நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பு ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அறுவடை பணி முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப் பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு நேற்று தஞ்சை வந்தது.
திருச்சியில் இருந்து தஞ்சை வந்த மத்தியக்குழுவில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் பிரிவு உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தஞ்சை மண்டல மேலாளர்(பொறுப்பு) கார்த்திகை சாமி, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா ஆகியோரும் உடன் வந்தனர்.
முதல் கட்டமாக மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள கக்கரையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு உள்ளது? என்பதையும் அதற்கான கருவி மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்துபுதூர்,தெலுங்கன்குடிக்காடு, புலவன் காடு, பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் பூவாநத்தம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் நிலைய ஊழியர்கள் மத்திய குழுவினரிடம் எடுத்து காண்பித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய குழுவுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் கலெக்டர் சாருஸ்ரீ உடன் வந்தனர்.
அப்போது விவசாயிகள் கனமழையால் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்ததால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாகவும் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் எடமேலையூர், செருமங்கலம், பைங்காநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதைத் தொடர்ந்து மாலையில் நாகை மாவட்டத்திற்கும் மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
- மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
- எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.
மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் திமுக, அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாமக இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை.
டெல்டாவை அழிக்க பார்த்த கட்சிகள் திமுக, அதிமுக. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமக தான் வலியுறுத்தியது.
மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.
எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை.
பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது.
- குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,தாளடி சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். இதில் குறுவை, சம்பா ஆகிய இரண்டு சாகுபடிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
காவிரி நீரையும் மழை நீரையும் நம்பி செய்யக்கூடிய இந்த சாகுபடியால் வறட்சி மற்றும் வெள்ளம் , இயற்கை சீற்றம் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் பெருமளவில் கருகி பாதிப்புக்கு உள்ளாகின.
ஆனால் தமிழக அரசு சம்பா, தாளடி சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு அறிவிக்கின்றது. குறுவை சாகுபடிக்கு அறிவிப்பது கிடையாது.
நேற்று சம்பாவுக்கு இழப்பீடு தொகை அறிவித்தது. ஆனால் குறுவை பயிர்களுக்கு காப்பீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியதாவது :-
தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தேவையில்லை. பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாகவும் சம்பா சாகுபடிக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது குறுவை பாதித்த விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.
விவசாயிகள் பிரீமியம் செலுத்தி பயிர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும். ஆனால் நிவாரண நிதி என்று அரசு அறிவித்தால் ரூ.5000 மட்டுமே கிடைக்கும். அதுவும் அரசுதான் பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஏற்படுவதோடு அரசாங்கத்திற்கும் ரூ.5000 இழப்புதான் ஏற்படும்.
ஆனால் பயிர் காப்பீடு செய்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் 100 சதவீதம் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கும் காப்பீடு அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை என்றார்.
- தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
- டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ,பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும்.
இதில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டுக்கான மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.
கல்லணைக்கு காவிரி நீர் நாளை இரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
வயல்களில் உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்ட ங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
இதில், டெல்டா மாவட்டத்துக்கு உள்பட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வளத்துறை ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ,விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
- கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது.
பூதலூர்:
தஞ்சை உள்ளிட்ட 11காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு ரூ 80 கோடிக்கு 4004 கிமீ நீரை 636 பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடி மதிப்பீட்டில் 1068.45 கிமீ தொலைவிற்கு நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரிட ஒப்புதல் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடியில் 6 கோட்டங்களில் 189 பணிகள் மேற்கொள்ளப்படும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27.50 லட்சம் ஆகும். ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ளே பொக்ளின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்கு ஏதுவாக ஆனந்த காவேரி வாய்க்காலில் 100மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளிடம் கூறியதாவது. காவிரி டெல்டா 12 மாவட்டங்களுக்கு தூர் வாரும் பணிகளுக்காக ரூ90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லா வேலைகளையும் ரூ90 கோடியில் செய்ய இயலாது .எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை எடுத்து செயல்படுத்தப்படும். இங்கே தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஆனந்த காவேரி வாய்க்கால் தூர் வாரரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படஉள்ளது. தூர்வாரம்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள், இதற்கு மேலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.
தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .அதனால் தாமதம் இன்றி விரைவாகவே பணிகள் நடைபெறும் .முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது என்று கூறுவது நியாயமானது.
அதை சரி செய்வதற்கு என்ன வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுது கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமமுள்ளதாக விவசாயி ஒருவர் கேட்ட பொழுது இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த நாளில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார் என்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் , தலைமை கொறடா கோவி செழியன், எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், பூண்டி கலைவாணன் , அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர்சண் ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்.
பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன்,மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தூர் வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க கண்காணிப்பு செயலியின் செயல் முறையை கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.
- இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
- தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.
தஞ்சாவூர்:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நட்டு ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதக்கிறது.
இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது.
மீண்டும் புதிதாக செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.