என் மலர்
உள்ளூர் செய்திகள்

சம்பா பயிர்களை தாக்கும் குருத்துப்பூச்சிகள்
- நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
- குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.
தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.
மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.






