search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pigs"

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் அதிகளவு சுற்றி திரிந்து வந்தது.

    இதனால் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டத்தோடு, சாலைகளில் குறுக்கே ஓடும் பன்றிகளால் போக்குவரத்துபாதிப்பு, விபத்தும் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து இடையூறாக உள்ள பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரராஜ் முன்னிலையில் பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் நகரில் சுற்றிதிரிந்த 80 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    • அதிகளவு பன்றிகள் சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
    • 74 பன்றிகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளில் அனேக வார்டுகளில் பன்றிகள் அதிகளவு சுற்றிதிரிவதால் போக்குவரத்து இடையூறும், சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டது.

    பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திட மக்கள் விடுத்த கோரிக்கையின்படி மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்க நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், ஆணையர் ஹேமலதா மேற்பார்வையில், மது ரையை சேர்ந்த நிறுவனம் மூலம் 74பன்றிகள் வரை பிடிக்கப்பட்டு வாகன த்தில் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்ஸ்பாண்டியன், நித்தியானந்தம், தமிழ்மணி உடனிருந்தனர்.

    • சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.
    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, பழைய பேருந்து நிலையம், ஊழியக்காரன்தோப்பு, ஆர்.வி.எஸ்.நகர்,திருவள்ளுவர்நகர்,திட்டைசாலை, மாரிமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் நகர் பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.

    கூட்டம்,கூட்டமாக சுற்றிவந்ததால் அப்பகுதியில் கொசுதொல்லையும்,சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டுவந்தது.

    மேலும் விவசாய நிலங்களில் உட்புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி போலீஸார் பாதுகாப்புடன் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் திருமங்கலத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் அவரது ஊழியர்களால் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட பன்றிகள் வாகனங்களில் வலையுடன் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரன், இளநிலை உதவியாளர் பாபு, அலெக்ஸ் ஆகியோர் உடன்இருந்தனர்.

    சீர்காழி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பன்றிகளை அப்புறப்ப டுத்த உத்தரவிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி , சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, இதற்கு ஒத்துழைப்பு நல்கிய சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர், சீர்காழி வட்டாச்சியர், சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோருக்கு சீர்காழி நகர பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கழுமலையார் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கோவி.நடராஜன் தெரிவித்தார்.

    • 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
    • 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்‌.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

    மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    • விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
    • மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு  என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன.பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட இடங்களில் முதல் கட்டமாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து அகரக்கொந்தகை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், நற்குணம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.

    இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது.
    • பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி திருவையாறு சாலையில் மகாராஜபுரம் கிராமம் அமைந்துள்ளது.

    காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த கிராமத்தில் காவிரி ஆற்றுநீரை கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலையில் உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் மூலமும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது இந்த கிராமத்தில் உள்ள வயல்களில் நெல் பயிர் கதிர் விட்டு நல்ல நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நெல் வயல்களில் பன்றிகள் கூட்டம் புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில் நான் 12 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஆத்தூர் கிச்சடி ,தூயமல்லி, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல்ரகங்களை விவசாயம் செய்து உள்ளார்.

    தற்போது நெல் பயிர் நல்ல முறையில் வளர்ந்து கதிர் விட்டு இன்னும் 10 அல்லது 12 நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தது.

    இது போன்றசூழ்நிலையில் வயல்களில் இரவு நேரங்களில் திடீரென்று பன்றிகள்கூட்டமாக புகுந்து நாசம் செய்து விடுகிறது. இதனால் பயிர்கள் கடும் சேதம் அடைந்து உள்ளது.

    பன்றிகள் அங்குமிங்கு வயலில் ஓடுவதால் பயிர்கள் சேரோடு சேராக அமிழ்ந்து போய் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்ய இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

    இதனால் பெரிய அளவில் மகசூல் இழப்பும் நட்டமும் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார்.

    எனவே பாதிக்கப்பட்ட அப்பகுதி வயல்களை விவசாய அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும், பன்றிகள் கூட்டம் வயலில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளுகம், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி, விளார்ரோடு, 20 கண் பாலம் ஆகிய இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து பன்றிக ளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தெருக்களில் சுற்றி தெரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 18 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித்திரிந்த ஆடு, மாடுகளை மாநகராட்சி பிடித்து சென்றனர். பின்னர் அதனை மீட்க உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் சிலர் கால்நடைகளை மீட்க முன் வராததால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. பின்னர் தொடர் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகமும் கைவிட்டது. இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் தனியாருடன் ஒப்பந்தம் செய்தது.

    இதையடுத்து நேற்றைய தினம் கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இது தொடர்பாக பலமுறை பன்றி வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவேதான் பன்றிகள் பிடிக்கப்படுகிறது என்றனர்.

    பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களையும் பிடித்து செல்ல வேண்டும். அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்கையில், மாநகராட்சி பகுதியில் மேலும் 3 நாய்கள் கருத்தடை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கால்நடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை.
    • பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, வீரமாத்தியம்மனுக்கு பூஜை,முனீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக பூஜை,பொங்கல் சாட்டுதல், முனீஸ்வரர் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் கண் திறப்பு பூஜை, கன்னிமார் சுவாமி அம்மன் அழைப்பு ,படுகளம் மற்றும் உடுக்கை பாட்டு,சுவாமிக்கு பொங்கல் படைத்தல் ,உருவாரம் எடுத்து வருதல் ,சுவாமிக்கு அலங்காரம் மற்றும் உச்சி கால மகா பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் 150க்கும் மேற்பட்ட பன்றிகள்,100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்கள்,சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக பொங்கல் விழாவை முன்னிட்டு புதிய சிற்பிகள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் திண்டு பாலுவின் ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் கவிதா ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திண்டுபாலு, மோகனகண்ணன், ஜெயபாலன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிக்கண்ணன் வரவேற்றார்.இதில் கவுன்சிலர்கள் சசிரேகா ரமேஷ்குமார் ,தண்டபாணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.காவல் துறை,பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகள் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் பல்லடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

    ×