என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்"

    • கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.
    • கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை.

    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள கோவையில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் நோய்பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் வேலந்தாவளம், வாளையாறு உள்ளிட்ட 12 எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கோவை வழியாக கேரள பன்றி பண்ணைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புததுறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பிலும் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட சில இடங்களில் செயல்பட்டு வரும் பன்றி வளர்ப்பு பண்ணைகளை கண்காணித்து வருகிறோம். தற்போது பரவுவது ஏ.எஸ்.எப் வகை பன்றி காய்ச்சல் ஆகும்.

    எனவே வளர்ப்பு பன்றிகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்கும்படி பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
    • நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கோவை:

    கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், திருச்சூர் பகுதிகளில் வளர்ப்பு பன்றிகளுக்கு, ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தமிழக-கேரள எல்லையையொட்டி உள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை-கேரள மாநில எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 12 சோதனை சாவடிகளிலும் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவை-கேரள எல்லையில் உள்ள முள்ளி, கோபனாரி உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து பன்றிகளுக்கு தேவையான தீவனம் மற்றும் பன்றி இறைச்சி ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பன்றிகளுக்கான தீவனம், தீவனப் பொருட்கள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் இருந்து வரக்கூடிய இதர வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    சோதனை சாவடிகளில் பன்றிகள், உணவு கழிவுகள், பண்ணை தீவனங்கள் உள்ளிட்டவை ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதர வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட் பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் 2,200 பன்றிகள் பராமரிக்கப்படுகிறது. அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.

    பண்ணைகளில் உள்ள பன்றிகள் திடீரென தீவனம் கொள்ளாமல், காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, இறப்பு, இறப்புக்கு பின் ரத்தகசிவு ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் இதுவரை ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கூடலூர் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சோதனை சாவடி வழியாக வரக்கூடிய வெளிமாநில சரக்கு வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

    மேலும் பன்றி, அவற்றின் இறைச்சி ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

    ×