search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swine flu"

    • நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப்பண்ணையில் 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவை வினோத நோய் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தியதில், இறந்த 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி 2 பண்ணைகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு, நெறிமுறைகளின்படி தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சியை கொண்டுசெல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    • தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    • சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்
    • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பன்றி காய்ச்சல்

    வாணியம்பாடியில் ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப் பட்டு இறந்ததை தொடர்ந்து வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் உள்ள பொதுமக்க ளுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை.

    இந்த பரிசோதனை வாலாஜாவில் உள்ள பொது சுகாதாரத்துறை பரிசோ தனை கூடத்தில் செய்யப்பட் டது. வாணியம்பாடியில் உயிர் இழந்த நபர் கடந்த சில வாரங்களாக கல்லீரல் சுருக் கம் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு சென் னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    மேலும் அவர் பல்வேறு கோவில்கள், நகரங் களுக்கு சென்றது தெரியவந் தது. ஆகவே அவருக்கு பய ணத்தினால் வெளியூர்களில் வைத்து தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம். பன்றிக்காய்ச்சல் குறித்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த பொதுமக் கள் அச்சப்பட தேவை யில்லை. அங்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.

    நியூடவுன் பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிருமிநா சினி தெளிக்க நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு வழங் கப்படும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்க ளுக்கு மாத்திரை வினியோ கம் செய்யப்படும்.

    பொதுமக்களும் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடு வதை தவிர்த்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • கலெக்டர் தகவல்
    • வாணியம்பாடியில் வியாபாரி பலியானார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார் (57). இவர் பால் விற்பனை, மாவு அரவை மில் மற்றும் மளிகை கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 21 -ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மேலும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

    நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் நகராட்சி மூலம் முக கவசங்கள் வழங்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    பின்னர் உயிரிழந்தவரின் சடலம் சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் யாரையும் நெருங்க விடாமல் அவருடைய பிணத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அஞ்சலிக்காக 5 நிமிடம் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் நகராட்சி நிர்வாகம், சுகாதாரதுறை மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கொரோனா கால கட்டத்தில் இறந்தவரை அடக்கம் செய்தது போன்று 15 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு பிளீச்சிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை குழியில் போட்டு நகராட்சி பணியாளர்கள் கவச உடை அணிந்து மிகவும் பாதுகாப்பாக சடலத்தை அடக்கம் செய்தனர்.

    பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களால் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    உயிரிழந்த நபர் எங்கெங்கு பயணம் செய்தார் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    அதேபோல் இந்த நோய்க்கான தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. அது பொதுமக்களுக்கு தேவைப்பட்டால் அளிக்க ப்படும். போதிய அளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கேரள மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மழை காலங்களில் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கம் போல் பெய்யாமல் ஏமாற்றினாலும், பருவ மழை பெய்ய தொடங்கிய போது அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவியது.

    மேலும் அங்கு பறவை காய்ச்சலும் பரவியதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

    கண்ணூர் மாவட்டம் கேணிச்சார் மலையம்பாடி பகுதியில் உள்ள 2 பன்றி பண்ணைகளில் மாவட்ட கால்நடை நல அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த பண்ணைகளை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பரப்பளவை பாதிக்கப்பட்ட பகுதியாகவும், 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளை கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த பகுதிகளில் பன்றி இறைச்சி வினியோகம் செய்யவும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு செல்வதற்கும், பிற பகுதிகளில் இருந்து கண்காணிப்பு மண்டல பகுதிகளுக்கு பன்றிகளை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை 3 மாத காலம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்ரிக்க காய்ச்சல் பாதிப்பு இருக்கும் 2 பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல கண்ணூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி கொல்லப்படும் பன்றிகளின் உடல்களை விதிமுறைப்படி அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவியிருப்பது அந்த மாவட்டம் மட்டுமின்றி, கேரள மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவ தொடங்கியது. பல்வேறு வித காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கேரளாவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தாளப்புழா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக மேப்பாடி விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிர் இழந்தார்.

    கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்று விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 19 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதன் உடல்களை பரிசோனை செய்து ஆய்வுக்கு அனுப்பி யதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வனத்துறையினரிடம் இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்பட்டு வனக்காப்பக எல்கைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை சாப்பிட வரும் காட்டு பன்றிகளை கண்கா ணிக்கவும், ஏதேனும் இறப்பு நேர்ந்தால் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித காட்டுப் பன்றிகளும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஏதேனும் நோய் தாக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித தாக்கமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொ ள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றி களுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடை பாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நி யர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை. சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரிப்புத்துறையினர் பன்றி ப்பண்ணை யாளர்களுக்கு தொடர்ந்து தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதோடு பண்ணைகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.
    • நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் மற்றும் வாத்துக்கள் அழிக்கப்பட்டன.

    மேலும் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பண்ணைகள் உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு பண்ணையில் இருந்த 70 பன்றிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியது. பின்னர் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்று அழிக்கும் பணி தொடங்கியது. இதனை சுகாதாரத்துறையினரும், கால்நடை துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கிளாரா மேரிக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • கிளாரா மேரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கோரிமேடு ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கப்ரியல் (வயது 55). அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிளாரா மேரி (51).

    இவருக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கிளாரா மேரிக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த கிளாரா மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயரிழந்த கிளாரா மேரி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் சென்று வந்ததால் அங்கிருந்து அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    • பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மாவட்டம் அழுர் அருகே பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளும், வாத்துகளும் அடுத்தடுத்து இறந்தன.

    அதைத்தொடர்ந்து இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபாலில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பறவை காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள கோழிகள், வாத்துகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக 2 ஆயிரம் பறவைகளை இன்று (திங்கட்கிழமை) அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வெளிப்பகுதிகளில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல அங்கு புதிதாக 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    ×