search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயல்களுக்குள் புகுந்த மழைநீர்
    X

    தென்னந்தோப்பில் தேங்கியுள்ள மழை நீர். 

    வயல்களுக்குள் புகுந்த மழைநீர்

    • வாடிப்பட்டி அருகே ஜவுளி பூங்காவில் இருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்தது.
    • வடிகால் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் உள்ளது. இந்த ஜவுளி பூங்காவை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் 4 புறமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பூங்காவின் தென்மேற்கு புறம் உள்ள கம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அந்தபகுதியில் பெய்த மழைத்தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வெளியேறி வயல்கள், புளியந்தோப்புகள், தென்னந்தோப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    பல ஆண்டுகளுக்கு முன் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியபின் மாறுகால் செல்லும் ஓடை தேசியநான்குவழிச்சாலை அமைத்ததால் தூர்ந்து போய்விட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லவழியில்லாமல் வயலுக்குள் தேங்கி விடு கிறது. எனவே தூர்ந்து போன ஓடைக்கு மாற்றாக புதியதாக மழைவெள்ளம் செல்லும்படியாக வடிகால் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயி கருப்பையா என்பவர் கூறியதாவது:-

    தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளிபூங்கா சுமார் 127ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகஅளவில் மழைபெய்யும்போது மழை வெள்ளம் காம்பவுண்டுசுவர் இடிந்துவிழுந்ததால் எங்கள் வயல்களில் புகுந்துவிட்டது. இதனால் தற்போது நான் பயிரிட்டுள்ள 4 ஏக்கரில் 300 தென்னைமரங்களிலும், 10 மாமரங்களிலும், 50 செண்டில் உள்ள தீவண புல்லிலும் தண்ணீர்தேங்கி வடிகால் இல்லாததால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    மேலும் அடுத்தடுத்துள்ள தென்னந்தோப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளிபூங்கா தண்ணீர் வெளியில் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×