search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduate"

    • அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
    • உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.

    இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

    இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருைவ சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபுகண்ணன். இவர் மூலமாக அய்யப்பன் என்பவர் கார்த்திக்குமாருக்கு அறிமுகம் ஆனார்.அவர் மின்வாரியத்தில் அரசு வேலை பெற்றுத்தருவதாக கார்த்திக்குமாைர நம்பவைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் 2 தவணையாக ரூ.14 லட்சம் கார்த்திக்குமார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார்த்திக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யப்பன், பிரபுகண்ணன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. ராணுவ வீரரான இவரது கணவர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், சித்தார்த்தா (வயது25) என்ற ஒரு மகனும் உள்ளனர்.2 மகள்களுக்கும் திருணம் செய்து கொடுத்த லோக நாயகி, தனது மகன் சித்தார்த்தாவுடன் வசித்து வந்தார்.

    சித்தார்த்தா என்ஜினீயரிங் முடித்துவிட்டு தைவான் நாட்டில் எம்.எஸ்.படித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக படிப்புக்கேற்ற வேலையை தீவிரமாக தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று லோகநாயகி மட்டும் திருச்சியில் வசிக்கும் தனது சகோதரரை பார்க்க சென்று விட்டார். .

    இதற்கிடையில் சம்பவத்தன்று திருச்சியில் இருந்த லோகநாயகி மகனின் செல்போனுக்கு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த லோகநாயகி ராஜபாளையத்தில் உள்ள தனது சகோதரி ராம திலகத்திடம் தகவல் தெரி வித்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

    உடனே அவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேக மடைந்த ராமதிலகம் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் சித்தார்த்தா தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்தார்த்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வாலிபரின் உடலை பார்த்து தாய், அவரது சகோதரிகள், கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலை கிடைக் காத விரக்தியில் சித்தார்த்தா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அரசாணை வழங்கிட வேண்டும்.

    மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வேண்டும்.

    2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
    • மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • பீரோவில் இருந்த மணப்பெண்ணின் செயின், ஆரம், வளையல், மோதிரம் ஆகிய நகைகள் மாயமாகி இருந்தது.
    • போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்.

    இவரது மகளுக்கு கடந்த 18ந்தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

    இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு காவலர்கள் திருமுருகன், மோகன், சிவசங்கரி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேலும் விசாரணையில் அவர் எம்சிஏ பட்டதாரியான வினிதா, மணப்பெண்ணுடன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளார்.

    பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந்தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார் அப்போது மணப்பெண் நகைகளை கழட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார்.

    பின்னர் தோழி மற்றும் உறவினர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊருக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார்.

    பின்னர் மன்னார்–குடிக்கும் சொந்த ஊர் திருத்துறை ப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நகைகளை கைப்பற்றி வினிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் முத்து ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதா–ரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்ய ப்பட்டுள்ள 44 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பொருட்டு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளா ண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி யாற்றுபவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். 21 முதல் 40 வயதுடையவர்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

    முன்வைக்கும் திட்டத்தின் உரிமை ஒற்றை உரிமை யாளருடையதாக இருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் இ வேளா ண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு க்கான செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க இயலாது.

    தொழில் முனைவோராக விருப்ப–முள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ண ப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வங்கிகளில் பெறப்பட்ட கடன் ஒப்பதல் ஆவணம் ஆகிய ஆவணங்க ளுடன் வருகிற 20-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    எனவே தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    • இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது30). இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்த நிலையில் இதே ஊரில் உள்ள சித்தி அமுதா வீட்டில் வளர்ந்து வந்தார்.

    எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள ஆனந்த் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சிலநாட்களுக்கு முன்பு காணாமல்போன ஆனந்த் குறித்து அவரது உறவினர் தமிழரசன் காடுபட்டி போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன பட்டதாரி வாலிபர் ஆனந்தை தேடிவந்தனர். நேற்று காலை சோழவந்தான் அருகே உள்ளவைகையாற்று தடுப்பணையில் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது ஆற்று நாணலில் சிக்கி ஆண் பிணம் மிதப்பதாக காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவஇடத்திற்கு போலீசார் சென்று சோழவந்தான் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றினர்.

    முழுக்கை சட்டை மற்றும் கைலியுடன் அழகிய நிலையில் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த உடல் மன்னாடிமங்கலத்தை சேர்ந்த காணாமல் போன பட்டதாரி வாலிபர் ஆனந்த் என்பது தெரியவந்தது.

    ஆனந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
    • அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.

    ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    • வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சமையன்வலசையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). எம்.எஸ்.சி, பி.எட் முடித்துள்ள இவருக்கு படிப்புக்கேற்ற வேைல தேடி வந்தார். இவரது மனைவி லட்சுமி ராமநாதபுரம் அரசு கல்லூரியில் விரிவுரை யாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×