search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Agriculture"

    • ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதா–ரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை த்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் வகையில் 44 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்ய ப்பட்டுள்ள 44 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பொருட்டு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்த பட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளா ண்மை பொறியியல் பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி யாற்றுபவராக இருக்க கூடாது.

    கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்ற தெரிந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். 21 முதல் 40 வயதுடையவர்கள் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

    முன்வைக்கும் திட்டத்தின் உரிமை ஒற்றை உரிமை யாளருடையதாக இருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் இ வேளா ண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு க்கான செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க இயலாது.

    தொழில் முனைவோராக விருப்ப–முள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ண ப்பத்துடன் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வங்கிகளில் பெறப்பட்ட கடன் ஒப்பதல் ஆவணம் ஆகிய ஆவணங்க ளுடன் வருகிற 20-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    எனவே தொழில் முனைவோராக விருப்ப முள்ள வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×