search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started"

    • 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.
    • கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்படவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், 2023-24 வது கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. பாடப்பிரிவைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெறப்ப ட்டுள்ளது. எம்.பி.ஏ. பட்ட வகுப்பில் சோ்வதற்கு டான்செட் எழுதிய மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

    தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கல்லூரி விருப்பத் தோ்வு மற்றும் கலந்தாய்வு இணைய வழியில் இன்று முதல் நடைபெறுகிறது.

    இதுதொடா்பான விவரங்களை இணையதளம் https://cgac.in/ மூலமாக மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.2¼ கோடி மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • போதையில்லா கோவை திட்டத்திற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.30 லட்சம் மதிப்புள்ள 143 செல்போன்களை உரிய ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் இதுவரை தனிப்படை மூலம் ரூ.2¼ கோடி மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கஞ்சாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 611 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரூ. 33 லட்சம் மதிப்பில் கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 4369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரத்து 350 மது பாட்டில்கள், 7, 735 ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    26 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 326 திருட்டு வழக்குகளில் 444 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    குழந்தைகளுக்கு எதிரான 116 பாலியல் குற்றங்களில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டில் இதுவரை 128 பாலியல் வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் 8 பேருக்கு சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

    மிஷன் கல்லூரி திட்டத்தின் கீழ் போதையில்லா கோவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் 900 325 1100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண் கல்லூரி வளாகம் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஒட்டப்ப டும். போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    அவர்களது பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
    • 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.

    இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர்.
    • முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் அலுவலகம் இணை ந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் பாவூர் சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.

    அரிமா சங்கத்தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலை மை ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளர் ராமசாமி, துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தசெல்வி, உறுப்பினர் சங்கர், அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம், முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் (தேர்வு) சசி ஞான சேகரன், பொருளாளர் (தேர்வு) சினேகாபாரதி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    முகாமானது வருகிற (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. எனவே புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் தேவைப்படுவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கப்பட்டுள்ளது.
    • துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையத்தை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சி பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய மற்றவருக்கு உபயோகமான துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலர் கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம். மானாமதுரை நகரை குப்பை இல்லாத நக ராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்த பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச் செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    • சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உலகப் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மகரீபு தொழுகைக்கு பின் மவ்லீது (புகழ் மாலை) ஓதப்பட்டு நேற்று தொடங்கியது. இதை யொட்டி தர்கா அக்தார்கள் முன்னிலையில் ராமநாத புரம் மாவட்ட டவுன் ஹாஜியார் சலாஹூதீன் ஆலிம் தலைமையில் புகழ்மாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தொடர்ந்து தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் மவ்லீது ஷரீப் எனும் புகழ்மாலை 23 நாட்களுக்கு ஓதப்படுகி றது. அதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, நாட்டியக் குதிரைகள் நடன மாட, சந்தனக்கூடு பவனி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரின் அணி வகுப்புடன் புனித மக்பரா வில் சந்தனம் பூசப்படும்.

    19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு 849-வது உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். யாத்ரீகர்க ளுக்கான சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    • திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்புபணி தொடக்க விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடக்க விழா நடைபெற்றது. பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். யூனியன் சேர்மன் காவேரி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, அரியப்பபுரம் ஊராட்சி தலைவர் தினேஷ்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், ஒப்பந்ததாரர் சண்முகவேலு, காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக, பிராக்டிக்கல் தேர்வு, மாநிலம் முழுவதும் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும், 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில், 17 ஆயிரத்து 810 பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 877 பேர் என, மொத்தம், 37 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள், மேல்நிலைக்கல்வி அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு, அக தேர்வு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை அளிப்பார்கள். இந்த மதிப்பெண்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். பிராக்டிக்கல் தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
    • சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    செய்முறை தேர்வு தொடங்கியது

    இதனிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.

    இதேபோல் 18,830 மாணவர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    ஆர்வம்

    செய்முறை தேர்வில் இம் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். பள்ளி ஆய்வகத்தில் மாணவ- மாணவிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட செய்முறையை உடனுக்குடன் ஆய்வு செய்து காட்டினர்.

    ஒரு சில பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று, தேர்வு முறையாக நடைபெறுகிறதா?, ஆய்வக கூடத்தில் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், செய்முறை தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அட்டவணை

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மனையியல், ெதாழிற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

    நீலகிரி

    கூடலூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தொடங்கியது. பாகற்காய் விவசாயம் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் பெய்வது வழக்கம். இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் விளையக்கூடிய இஞ்சி, ஏலக்காய், காபி மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டது. இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் பயிரிட்டு இருந்த நெல் அறுவடை பணியும் நிறைவு பெற்றது. தொடர்ந்து வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், அவரக்காய் உள்ளிட்ட கோடை கால பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதில் பாகற்காய் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளது. 

    கேரளாவில் வரவேற்பு இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இந்த மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும். இதேபோல் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டும், கோடை வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய் பயிருக்கு கேரளாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாகற்காய் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து பாகற்காய் அறுவடை செய்யப்பட்டு கேரளாவுக்கு தினமும் லாரிகளில் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகற்காய் உயர் ரக விதைகள் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.


    சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்  அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.

    இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார்  1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா   நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.

    யூனியன் தலைவர்  ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்  பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர்   அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன்,  நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள்  லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

    ×