search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar Special Camp"

    • கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர்.
    • முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் அலுவலகம் இணை ந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் பாவூர் சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.

    அரிமா சங்கத்தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலை மை ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளர் ராமசாமி, துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தசெல்வி, உறுப்பினர் சங்கர், அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம், முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் (தேர்வு) சசி ஞான சேகரன், பொருளாளர் (தேர்வு) சினேகாபாரதி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    முகாமானது வருகிற (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. எனவே புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் தேவைப்படுவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • ஊத்துக்குளியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • ஈரோடு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள தபால் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தொடர்ந்து இம்முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி நடைபெறும்.இதில் ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு, கைரேகை பதிவு, முகவரி, பெயர் மாற்றம் மற்றும் பிறந்த தேதி பதிவு போன்ற முக்கிய திருத்தங்கள் பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை ஈரோடு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகர பாபு தெரிவித்துள்ளார்.

    • தினசரி ஏராளமான மக்கள் ஆதார் சேவை மையங்களில் திரள்கின்றனர்.
    • ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் ஆதார் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    திருப்பூர் :

    மக்களின் வங்கி சார்ந்த பணிகள், அரசின் நலத்திட்டங்கள், மானிய உதவி, வங்கிக்கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து தேவைகள் சார்ந்தும், ஆதார் எண் அவசியமாகிறது. இதனால் புதிய ஆதார் அட்டை வாங்க, ஏற்கனவே உள்ள ஆதார் எண்ணில் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தினசரி ஏராளமான மக்கள் ஆதார் சேவை மையங்களில் திரள்கின்றனர்.

    தாலுகா வாரியாக தாலுகா அலுவலகம், ஒரு சில தபால் அலுவலகம், வங்கிக் கிளைகளில் மட்டுமே ஆதார் சார்ந்த பணிகள் நடந்து வரும் நிலையில், மக்களின் தேவை பூர்த்தியாவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தபால் துறை சார்பில் கிராம ஊராட்சிகள் தோறும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் ஆதார் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    இதனால், தபால் துறைக்கும், சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கும்திருப்பூர் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.

    ×