search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.41 கோடியில் திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலைப்பணி தொடக்கம்
    X

    சாலைபணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.4.41 கோடியில் திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலைப்பணி தொடக்கம்

    • திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்புபணி தொடக்க விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடக்க விழா நடைபெற்றது. பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். யூனியன் சேர்மன் காவேரி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, அரியப்பபுரம் ஊராட்சி தலைவர் தினேஷ்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், ஒப்பந்ததாரர் சண்முகவேலு, காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×