search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலிங்"

    • சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1,99,868 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    • சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்தனர்.

    மாணவர்களின் கோரிக்கைகளையேற்று என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு 2,53,954 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர்கள் 2,09,645 பேர் ஆவார்கள்.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1,99,868 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் நடப்பு கல்வியாண்டில் 2,32,376 இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (திங்கட்கிழமை)தொடங்குகிறது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான (7.5 சதவீத இடஒதுக்கீடு) கலந்தாய்வு 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறும். அதை தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவின்கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

    பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும், எஸ்.சி. அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலி இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10,11-ந்தேதிகளிலும் நடைபெறும். செப்டம்பர் 11-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும்.

    என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 441 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

    • பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம்.
    • இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    திருப்பூர்,ஜூலை.17-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கவுன்சிலிங், இன்று மற்றும் நாளை 18-ந்தேதி நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து வகுப்புகள் துவக்கப்படும் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு வேளாண் மை பல்கலையில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. 4,000ம் இடங்களுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலான இடங்கள் பொது கவுன்சிலிங் முறையில் சேர்க்கப்படுகின்றன. சிறப்பு ஒதுக்கீட்டின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இப்பிரிவில் 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு துறைக்கான முன்னுரிமை இடங்கள் 20 உள்ளன.

    இவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்க தயார் நிலையில் உள்ளோம். முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை அடிப்படையில் 20 இடங்கள் நிரப்ப தயாராக உள்ளோம்.

    பொது கவுன்சிலிங் முறைக்கு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, தர வரிசை பட்டியலுக்கு தயார் செய்துள்ளோம். 200க்கு 200 மதிப்பெண் பெற்ற 3 பேர், வேளாண் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். 199.5 மதிப்பெண் பெற்ற 17 பேர் வேளாண் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    199 மதிப்பெண் பெற்றவர்கள், 60 - -70 பேர் உள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு முறையிலும் சேர்க்கை நடக்கும்.தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு 240 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலும் தயாராகியுள்ளது.

    பொது கவுன்சிலிங் இன்று மற்றும் நாளை ஆன்லைன் முறையில் நடக்கிறது. விருப்பத்தின் அடிப்படையில் முதலாவது சுற்று இட ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றம் செய்யவும், இந்த இருநாட்களில் வாய்ப்பளிக்கப்படும். 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இது முடிந்தவுடன், உடனடியாக பணம் செலுத்தி வகுப்புகளில் சேரலாம்.

    விருப்பத்தின் பேரில் காத்திருப்பின்படி தகுதியுள்ள கல்லூரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நிறைவு செய்து வகுப்புகள் துவங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.
    • முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை:

    வீட்டு கடமையையும் பார்த்துக் கொண்டு போலீஸ் காவல் பணியிலும் இரவு, பகல் பாராது ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் 'ஆனந்தம்' என்றொரு திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளிலும் ஈடுபடும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைத்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது தான்.

    இந்த கவுன்சிலிங் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், யூட்ரஸ் பிரச்சினைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசுகையில், இங்கு நடைபெறும் இந்த பயிற்சியில் நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல் பணியினையும், குடும்ப பொறுப்பையும் சமநிலையுடன் வைத்து பணியாற்று மன அழுத்தமில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்ற பெண் போலீசார் கூறும்போது, இந்த கவுன்சிலிங் பெண் போலீசாருக்கு நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாகும். குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் பணியினையும் டென்சனில்லாமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று முகாமில் பயிற்சி அளித்தது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது என்றனர்.

    ×