என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் தாக்குதல்"
- மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஆதரவாளர்களான தினேஷ் ஒரு கோஷ்டி ஆகவும் தணிகா ஒரு கோஷ்டி ஆகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக எம்.சுதாகர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். பல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ரவுடிகளுக்கிடையேயான மோதலில் காஞ்சிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்று நேற்று இரவு மர்ம கும்பல் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முயன்ற பிரபுவின் மகன்கள் கமலேஷ், ஜெகன்நாதன் ஆகிய 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் கமலேஷ் கல்லூரி மாணவர் ஆவார். அவருக்கு தலையிலும், இடது கையிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டு காயம் அடைந்த கமலேசும், ஜெகன்நாதனும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அதேபகுதி சாலை தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கும்பல் கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கி விட்டு பொருட்களை சேதப்படுத்தி தப்பினர்.
சிறுவாக்கம் பகுதியில் ஏரிக்கரை அருகே மீன் ஏலம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் ராஜமன்னார் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த 3 சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிகிறது. ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






