என் மலர்
நீங்கள் தேடியது "பொறியியல் படிப்பு"
- இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
- கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியானது.
தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில் அதில் 994 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில் 125 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 39 ஆயிரத்து 145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 16-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ந்தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஜூலை18) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதற்கிடையே கலந்தாய்வின் போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு ஆகஸ்டு 20-ந்தேதியுடன் நிறைவுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார்.
- பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர்.
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கான தர வரிசை பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2374. அதில் பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 298. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40,645 அதிகமாகும்.
200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவர்களின் எண்ணிக்கை 144. அதில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 139 பேர். பிற வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 5 மாணவ மாணவிகள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தலோ இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் (ஜூலை 2) தங்கள் அருகாமையில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 641. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை நடக்கிறது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் வகித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாணவி கார்த்திகா 2-வது இடமும், அரியலூர் மாணவர் அமலன் ஆண்டோ 3-வது இடமும், தாராபுரம் மாணவர் கிருஷ்ணப்பிரியன் 4-வது இடமும் பிடித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஜி.தீபா, ஜே.தீபிகா 5-வது மற்றும் 6-வது இடங்களையும், திருப்பூர் மாணவர் விஷால் ராம் 7-வது இடத்தையும், திண்டுக்கல் மாணவி பவித்ரா 8-வது இடமும், திருப்பூர் மாணவிகள் சுப ஸ்ரீ மற்றும் கோதை காமாட்சி ஆகியோர் 9-வது மற்றும் 10-வது இடங்களை பெற்றுள்ளனர்.
இதே போல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூர் மாணவி தரணி 200க்கு 200 கட் ஆப் பெற்று முதலிடமும் சென்னை மாணவி மைதிலி 2-வது இடமும், கடலூர் மாணவர் முரளிதரன் 3-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் வெற்றிவேல் 4-வது இடமும், திருவண்ணாமலை மாணவி பச்சையம்மாள் 5-வது இடமும் பெற்றுள்ளனர்.
கடலூர் மாணவி அக்ஷயா 6-வது இடமும், செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் மாணவர் நித்திஷ் 7-வது இடமும், சேலம் மாணவர் ரோஹித் 8-வது இடமும், நாமக்கல் மாணவி ஹரிணி 9-வது இடமும், திருவண்ணாமலை மாணவர் பிரவீன் 10-வது இடமும் வகித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 7 மாணவிகளும், 3 மாணவர்களும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று 200 கட் ஆப் மார்க்கில் இருந்து 179 மதிப்பெண் வரை நடக்கிறது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 47,372 பேர் தகுதி உடையவர்கள். 22 619 பேர் ஆண்களும் 24 752 பெண்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி 18004250110 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று அது 1 லட்சத்தை கடந்து அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
- பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இன்று அந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் தொடங்கியது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று அது 1 லட்சத்தை கடந்து அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 17 ஆயிரத்து 618 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்தனர்.
- சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது.
- கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20-ந்தேதி நிறைவு பெற்றது.
சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி தரவரிசை பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
- தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
- பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
* மாணவர்கள், தங்களது தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம்
* தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
* பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டின் கீழ் 28,425 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* மாதம் 1000 ரூபாய் பெறும்திட்டம் மூலம் 13,284 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
* ஜூலை 2-ந்தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.
அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.
புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.
அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
- என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
- என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.
திருச்செந்தூர்:
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவி பா.நேத்ராவுக்கு சொந்த ஊர் சிறுத்தொண்டநல்லூர் ஆகும். இவரது பெற்றோர் பாலன், வித்யாகாந்தி. மாணவி கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தற்போது, என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி பா.நேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய படிப்புக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர், முதல்வர், ஆசிரியர்கள், என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணிகா என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்த மாணவி பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹரிணிகாவின் தந்தை மோகன் விவசாயம் செய்து வருகிறார். தாயார் திலகம். ஹரிணிகாவிற்கு மோனிஷ் என்ற அண்ணன் உள்ளார்.
இதுதொடர்பாக மாணவி ஹரிணிகா கூறியதாவது:-
என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 2-வது இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மாநில அளவில் 2-ம் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் நன்றாக படித்தேன். கணினி என்ஜினீயரிங் படிப்பை படித்து சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகி அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி லால்குடி மேலவாளாடியை சேர்ந்த மாணவி ரோஷினி பானு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர் கல்லணைரோடு வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் இவர் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஷானவாஸ். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாய் ரெஹானா பேகம்.
மாணவி ரோஷினிபானு கூறுகையில், "தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினந்தோறும் தேர்வு நடத்தினார்கள். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து பள்ளி செல்லும் வரை படிப்பேன். பின்னர் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் இரவு 10 மணி வரை படித்து வந்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.
- முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
- இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இந்த மாதம் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை நடைபெறும்.
2-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும்.
3-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு கூடுதலாக 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக 2 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன.
3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் காலி யிடங்கள் இருந்தால் மேலும் ஒரு கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு காலி இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்கும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு வேறு கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கட்டிய முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மட்டுமே எதிர்காலத்தில் நிறுவனங்களில் இடம்பெறும்.
- கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.க்கு ஒரு கட்டாய அனுபவ கற்றல் படிப்பை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர்களை எதிர்கால தொழில் தேவைகளுக்கு தயார்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வளர்ந்து வரும் படிப்புகளை அடுத்த செமஸ்டரில் இருந்து அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் சுமார் 320 இணைப்பு கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படிக்கும் சிவில் என்ஜினீயரிங் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 6 மற்றும் 7-வது செமஸ்டரில் ஏதேனும் இரண்டை தேர்வு படிப்புகளாக படிக்க வேண்டும்.
வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மட்டுமே எதிர்காலத்தில் நிறுவனங்களில் இடம்பெறும். தொழில் வல்லுனர்கள் நான் முதல்வர் திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த படிப்புகளை எடுத்து செல்வார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
இந்த நடவடிக்கையின் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.க்கு ஒரு கட்டாய அனுபவ கற்றல் படிப்பை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
மூன்றாம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவு மாணவர்கள், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்கீழ் கணினி தொடர்பான கிளைகளில் படிக்கும் மாணவர்கள், டேட்டா சயின்ஸ், புல் ஸ்டேக் டெவலப்மென்ட், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட 7 சிறப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், அனுபவ கற்றல் படிப்புகளை கொண்டு வருமாறு தொழில் துறைகளை நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். அங்கு மாணவர்கள் வழக்கு ஆய்வுகள், தொழில்துறை சிக்கல்களை தீர்ப்பது, திட்டங்களை செயல்படுத்தல் மூலம் கற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கணினி அறிவியல் மாணவர்களுக்கான திட்ட அடிப்படையிலான அனுபவ கற்றல், ஐ.டி. தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் ஒத்துழைப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
- பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் எனவும்,
- நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த நிலையில் மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மும்முரம் காட்டும் நிலையில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பத்திள்ளனர். செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
இதனால் வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளன. இந்த கட்டண உயர்வு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றப்பட உள்ளன. மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.
- தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.
- தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், மேலும் அவகாசம் கேட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது.
விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் கடந்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2-வது இடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களை மாணவிகள் பெற்ற நிலையில் நாமக்கலை சேர்ந்த கோகுல் என்ற மாணவன் 3-வது இடம்பெற்றுள்ளார்.
வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.
- பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். பொறியியல் கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறும். பல்வேறு பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
அரசு பள்ளி மாணவர்கள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கலந்தாய்வு முடிந்த பிறகும் பொறியியல் இடங்கள் காலியாக இருந்தால் வரண்டா அட்மிஷன் நடத்தப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள். பொறியியல் கலந்தாய்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே கலந்தாய்வு நடத்தப்பட உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை எத்தனை, அவற்றில் உள்ள இடங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் இடம் பெற்றுள்ளதா? ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் எதுவும் மூடப்பட்டதா? எந்தெந்த கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு இடங்கள் என்பது போன்ற முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணி நிறைவு பெற்று இன்று மாலை தொழில்நுட்ப கல்வி ஆணையரிடம் வழங்கப்படும்.
சீட் மேட்ரிஸ் விவரம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்தில் வெளியிடப்படும்.






