search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
    X

    பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

    • கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று அது 1 லட்சத்தை கடந்து அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
    • பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இன்று அந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் தொடங்கியது.

    இதையடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 8 நாள்களில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று அது 1 லட்சத்தை கடந்து அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 17 ஆயிரத்து 618 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.

    பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×