search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    சித்தார்த்தா

    என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை

    • என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. ராணுவ வீரரான இவரது கணவர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், சித்தார்த்தா (வயது25) என்ற ஒரு மகனும் உள்ளனர்.2 மகள்களுக்கும் திருணம் செய்து கொடுத்த லோக நாயகி, தனது மகன் சித்தார்த்தாவுடன் வசித்து வந்தார்.

    சித்தார்த்தா என்ஜினீயரிங் முடித்துவிட்டு தைவான் நாட்டில் எம்.எஸ்.படித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக படிப்புக்கேற்ற வேலையை தீவிரமாக தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று லோகநாயகி மட்டும் திருச்சியில் வசிக்கும் தனது சகோதரரை பார்க்க சென்று விட்டார். .

    இதற்கிடையில் சம்பவத்தன்று திருச்சியில் இருந்த லோகநாயகி மகனின் செல்போனுக்கு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த லோகநாயகி ராஜபாளையத்தில் உள்ள தனது சகோதரி ராம திலகத்திடம் தகவல் தெரி வித்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

    உடனே அவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேக மடைந்த ராமதிலகம் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் சித்தார்த்தா தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்தார்த்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வாலிபரின் உடலை பார்த்து தாய், அவரது சகோதரிகள், கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலை கிடைக் காத விரக்தியில் சித்தார்த்தா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×