search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்பு
    X

    ஆனந்த்

    அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்பு

    • சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    • இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது30). இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்த நிலையில் இதே ஊரில் உள்ள சித்தி அமுதா வீட்டில் வளர்ந்து வந்தார்.

    எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள ஆனந்த் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சிலநாட்களுக்கு முன்பு காணாமல்போன ஆனந்த் குறித்து அவரது உறவினர் தமிழரசன் காடுபட்டி போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன பட்டதாரி வாலிபர் ஆனந்தை தேடிவந்தனர். நேற்று காலை சோழவந்தான் அருகே உள்ளவைகையாற்று தடுப்பணையில் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது ஆற்று நாணலில் சிக்கி ஆண் பிணம் மிதப்பதாக காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவஇடத்திற்கு போலீசார் சென்று சோழவந்தான் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றினர்.

    முழுக்கை சட்டை மற்றும் கைலியுடன் அழகிய நிலையில் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த உடல் மன்னாடிமங்கலத்தை சேர்ந்த காணாமல் போன பட்டதாரி வாலிபர் ஆனந்த் என்பது தெரியவந்தது.

    ஆனந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×