என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி

என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருைவ சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபுகண்ணன். இவர் மூலமாக அய்யப்பன் என்பவர் கார்த்திக்குமாருக்கு அறிமுகம் ஆனார்.அவர் மின்வாரியத்தில் அரசு வேலை பெற்றுத்தருவதாக கார்த்திக்குமாைர நம்பவைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் 2 தவணையாக ரூ.14 லட்சம் கார்த்திக்குமார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார்த்திக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யப்பன், பிரபுகண்ணன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com