search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "man body"

    • தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ தேவி ஆண்டிபட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்துகிடந்த ஆண்சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என்பதும், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் போளுவாம்பட்டி ரேஞ்சராக வேலை செய்து வருபவர் ராமநாதன் (58). இவருக்கு வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 45 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மரத்தில் தொங்கியவாறு இருந்தது.

    இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய ஆணின் உடலை மீட்டு சோதனை செய்தனர்.

    அதில் அவர் இறந்து 2, 3 நாட்கள் இருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேஞ்சர் ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசார் வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் அங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோனங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வனப்பகுதியில் ஆண் பிணம் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கியவாறு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×