search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம்"

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பொதுப்பணிதுறையினர் ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க உத்தரவு
    • தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோட்ட அளவில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெ ற்றது.

    கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமைதாங்கினார். தாசில்தார் வி. பி.சந்திரன் வரவேற்றார்.

    வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் சாலையில் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும், பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பொதுப்பணி துறையினர் பவானி ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர் (காரமடை), சித்ரா (சிறுமுகை), மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் தினேசன், சுரேஷ்குமார்,

    நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரசன்னா, சாலை ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுந்தர்ராஜன், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி சிவக்குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம்,

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம் வருவாய் ஆய்வாளர்கள் வெண்ணிலா, காரமடை ரேணுகாதேவி, மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரங்கராஜன் நன்றி கூறினார்.

    • வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
    • புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நக ராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லா மல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.

    குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்குகின்றனர்.
    • பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் டீ குடிப்பது போல் அமர்ந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

    அப்படி வரும் பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர். அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய த்தில் நடை மேடையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர மர்மநபர் ஒருவர் ஏற்கனவே படுத்து உறங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் அமர்ந்து பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.

    சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    வீடியோ பரவுகிறது

    பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி. சி. டி. வி காமிராவினை ஆய்வு செய்த போது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை .தற்போது சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டு ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் நிகழ்ச்சி விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ள து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகளை கோவில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்ப ரை அறங்காவலர் வசந்தா ஆகியோ ர் செய்து வருகின்றனர்.

    • 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இளம்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தனர்.

    முதலில் தனது மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அவரை கண்காணித்தார். அப்போது மனைவி, வாலிபருடன் பேசுவதை அறிந்து கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க இளம்பெண்ணின் கணவர் முடிவு செய்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    .

    பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இளம் பெண்ணின் கணவர் வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் வெளியில் சென்றதும், இளம்பெண், தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபரை வீட்டிற்கு அழைத்தார். அவரும், இங்கு வந்தார். பின்னர் 2 பேரும் வீட்டிற் குள் தனிமையில் இருந்தனர். இதனையறிந்த இளம் பெண்ணின் கணவர், தனது உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, இளம்பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் அழைத்து கொண்டு அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து, அவரது மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதியவர் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆலம்பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (70).இவருக்கு பூவா(70) என்ற மனைவியும்,தங்கமணி என்ற மகளும் உள்ளனர். தங்கமணிக்கு திருமணமாகி கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரங்கன் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.பின்னர் நெல்லித்துறை சாலையில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

    அப்போது,அப்பகுதியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான லைப் கார்ட்ஸ் குழுவினர் உடனடியாக ஆற்றில் குதித்து பரிசல் மூலமாக அவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரங்கன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த லைப் கார்ட்ஸ் குழுவினர் பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார். இதுகுறித்து அவரது மகள் தங்கமணிக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

    தற்கொலைக்கு முயன்ற முதியவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த லைப் கார்ட்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டி பெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது.

    3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சங்கனூர் பள்ளத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×