search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    மேட்டுப்பாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • 2 வட மாநில வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர்.
    • இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை

    கோவை சூலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு பூரணம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவும் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். பின்னர் காதலர்கள்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இளம்பெண்ணுக்கு மீண்டும் முன்னாள் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கணவரை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×