search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalayam"

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பொதுப்பணிதுறையினர் ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க உத்தரவு
    • தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோட்ட அளவில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெ ற்றது.

    கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமைதாங்கினார். தாசில்தார் வி. பி.சந்திரன் வரவேற்றார்.

    வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் சாலையில் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும், பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பொதுப்பணி துறையினர் பவானி ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர் (காரமடை), சித்ரா (சிறுமுகை), மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் தினேசன், சுரேஷ்குமார்,

    நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரசன்னா, சாலை ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுந்தர்ராஜன், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி சிவக்குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம்,

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம் வருவாய் ஆய்வாளர்கள் வெண்ணிலா, காரமடை ரேணுகாதேவி, மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரங்கராஜன் நன்றி கூறினார்.

    • பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
    • காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
    • புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நக ராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லா மல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.

    குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்குகின்றனர்.
    • பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் டீ குடிப்பது போல் அமர்ந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

    அப்படி வரும் பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர். அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய த்தில் நடை மேடையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர மர்மநபர் ஒருவர் ஏற்கனவே படுத்து உறங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் அமர்ந்து பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.

    சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    வீடியோ பரவுகிறது

    பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி. சி. டி. வி காமிராவினை ஆய்வு செய்த போது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை .தற்போது சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டு ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் நிகழ்ச்சி விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ள து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகளை கோவில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்ப ரை அறங்காவலர் வசந்தா ஆகியோ ர் செய்து வருகின்றனர்.

    • 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இளம்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தனர்.

    முதலில் தனது மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அவரை கண்காணித்தார். அப்போது மனைவி, வாலிபருடன் பேசுவதை அறிந்து கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க இளம்பெண்ணின் கணவர் முடிவு செய்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    .

    பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இளம் பெண்ணின் கணவர் வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் வெளியில் சென்றதும், இளம்பெண், தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபரை வீட்டிற்கு அழைத்தார். அவரும், இங்கு வந்தார். பின்னர் 2 பேரும் வீட்டிற் குள் தனிமையில் இருந்தனர். இதனையறிந்த இளம் பெண்ணின் கணவர், தனது உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, இளம்பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் அழைத்து கொண்டு அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து, அவரது மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொழியும் மழைநீர் காட்டாறுகள் மூலம் பில்லூர் அணைக்கு வந்தடைகிறது.

    பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் நீரை மேட்டுப்பாளையம் தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டத்திற்கு 1, 2-வது கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் குழாய்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் போது நால்ரோடு, தேரம்பாளைம், நடூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத தால், அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிவு நீர் சாலையோரங்களில் வழிந்தோடும்.

    இதேபோல நேற்று இரவு மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் கிராம த்தில் ஒரு இடத்தில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் அருகிலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்தது. தோட்டத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. விடிய, விடிய தண்ணீர் பாய்ந்ததால் கிணறு முழுவதும் நிரம்பி வழிந்தது.

    கிணறு நிரம்பியதால் அருகிலுள்ள கருவேப்பிலை தோட்டத்திலும் தண்ணீர் சூழ்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து ள்ளனர். தற்போது மழை பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நேரத்தில் இவ்வளவு குடிநீர் வீணானது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெள்ளாதி ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது -

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.

    இச்சூழ்நிலையில் தேரம்பாளையம் பகுதியில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    • தேவிபாலா வைத்து இருந்த ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரை சேர்ந்தவர் பாலமுருகன்.

    இவரது மனைவி தேவிபாலா (வயது 37). சலவைதொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதற்காக மகள்களுடன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்து யாரோ மர்மநபர் தேவிபாலா கட்டைபையில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.

    பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுப்பதற்காக பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த தேவிபாலா இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). டிரைவர். இவர் தனது சொந்த ஊரான சத்திக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பஸ்சில் ஏறிய போது யாரோ மர்மநபர் கதிர்வேல் பேண்டின் பின் பாக்கெட்டில் ரூ.10,300 பணத்துடன் வைத்து இருந்த மணிபர்சை திருடி சென்றனர். இது அவரும் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காளான் உரத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.
    • மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காளான் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இந்த காளான் உரத்தொழிற்சாலையை மூடக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மூட வேண்டும் என கோரி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உரிய தீர்வு கிடைக்காததால் நேற்று அந்த காளான் உரத்தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டி பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அந்த தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் பசீர், ஊராட்சி தலைவர் ரங்கசாமி, வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில் முறையான அனுமதி பெற்றே தொழிற்சாலை செயல்படுகிறது. எங்களுக்கு நிலத்தை விற்பனை செய்தவர்களின் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினையில் எங்களை மிரட்டி வருகி ன்றனர். இந்நிறுவனத்தின் மூலம் சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் சட்டப்படி அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இத்தொ ழிற்சாலை செயல்படுகிறது என தெரிவித்தனர்.

    • கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும்.

    தென்திருப்பதி 4 ரோடு பகுதியில் இருந்து ஆலாங்கொம்பு 3 ரோடு வரை பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலையில் கழிவு நீர் ஓடுகிறது.

    இதனால் அந்த சாலை மேலும் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் குண்டும் குழியுமாக சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து உடனே சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் காரமடை பிள்ளுகடை முக்கில் இருந்து சிறுமுகை நீலிப்பாளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டி பெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது.

    3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சங்கனூர் பள்ளத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×