என் மலர்
நீங்கள் தேடியது "Mettupalayam"
- வண்டியில் எடுத்து செல்லும் போது கீழே விழுகின்றன.
- உரிமையாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நெல்லித்துறை ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மண்டிகளுக்கு கர்நாடகம், குஜராத், கோலார், நீலகிரி, கர்நாடக மாநிலம் ஹாசன் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு வருகிறது. இந்தக் கிழங்குகளை தரம் பிரித்து மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தரம் பிரிக்கும் போது ஏற்படுகின்ற கழிவுகளை மண்டிகளில் கொட்டி வைத்து அதனை தினமும் ஊட்டி சாலையில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள நேஷனல் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். அப்படி எடுத்துச் செல்லு ம்போது கழிவுகள் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டுகின்றன. இதனால் கழிவுகளில் ஈ மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது.
இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து கிழங்கு மண்டி உரிமையா ளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் தாசில்தார், நகராட்சி, மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 46). இவர் சிறுமுகைலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஜய்ஆனந்த் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.10 லட்சம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் இன்று சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜான் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில துணைத்தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், சுதாகர், வாசுதேவன், தினேஷ், மூர்த்தி, சரவணன், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 2 வட மாநில வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர்.
- இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை சூலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கு பூரணம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவும் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். பின்னர் காதலர்கள்கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இளம்பெண்ணுக்கு மீண்டும் முன்னாள் காதலனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கணவரை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
- கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மெமு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த ரெயிலை ஞாயிற்றுக்கி ழமையும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, எல்.முருகன் கடிதம் எழுதியதோடு அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து மத்திய ரெயில்வே மந்திரி உத்தரவின் பேரில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற 11-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையும் இனி மெமு ரெயில்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று மெமு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மேட்டுப்பாளையம்- கோவை இடையிலான ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் சுற்றுலாபயணிகள் பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் ரெயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்க தயாராக இருக்கிறார். பிரதமர் மோடி ரெயில்வே துறையை உலக தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ரெயில்வே கழிப்பறைகள் பயோ டாய்லெட்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான ரெயில் பயண கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது குறித்து எல்.முருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறிய தாவது:-
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து சேர இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதற்கு ரூ.27 வரை கட்டணமாக பெறுகி ன்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். கொேரானா காலத்தில் பயணிகள் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக மாற்றப்பட்டு உள்ளன. அதை இங்கு மட்டும் செயல்படுத்த வில்லை. நாடு முழுவதும் செயல்படுத்தி உள்ளனர்.
அது மத்திய அரசின் கொள்கை முடிவு. கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.
- கண்டக்டரை சக பயணிகள் கண்டித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு நேற்று மாலை 3.45 மணிக்கு அரசு பஸ் சுமார் 56 பயணிகளுடன் சென்றது. பஸ் அன்னூர் சாலையில் சென்ற போது புதுமார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.
கண்டக்டரிடம் பூபதியிடம் பயண டிக்கெட் வாங்கும் போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டினர். இதனை கண்டித்த சக பயணிகளையும் அவர்கள் திட்டினர்.
2 பேரையும் கீழே இறக்கி விடும் படி பயணிகள் கூறினர். ஆத்திரம் அடைந்த 2 பேரும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர். அவர்கள் கீழே குதித்து விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் அவர்களை கண்டக்டர் தடுத்தார்.
இப்படியே 2 பேரும் தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்குள் அன்னூர் பஸ் நிலையம் வந்தது. அங்கு பஸ் நின்றதும் 2 பேரும் இறங்கி அங்கிருந்து நழுவினர்.
குடிபோதையில் தொல்லை கொடுத்த 2 பேரையும் பஸ்சில் இருந்து இறக்கி விடாதது ஏன் என கேள்வி எழுப்பி கண்ட க்டரை சக பயணிகள் கண்டித்தனர்.
- கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும்.
தென்திருப்பதி 4 ரோடு பகுதியில் இருந்து ஆலாங்கொம்பு 3 ரோடு வரை பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலையில் கழிவு நீர் ஓடுகிறது.
இதனால் அந்த சாலை மேலும் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் குண்டும் குழியுமாக சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து உடனே சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் காரமடை பிள்ளுகடை முக்கில் இருந்து சிறுமுகை நீலிப்பாளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.
ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.
பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- காளான் உரத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.
- மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காளான் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த காளான் உரத்தொழிற்சாலையை மூடக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மூட வேண்டும் என கோரி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உரிய தீர்வு கிடைக்காததால் நேற்று அந்த காளான் உரத்தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டி பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அந்த தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் பசீர், ஊராட்சி தலைவர் ரங்கசாமி, வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில் முறையான அனுமதி பெற்றே தொழிற்சாலை செயல்படுகிறது. எங்களுக்கு நிலத்தை விற்பனை செய்தவர்களின் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினையில் எங்களை மிரட்டி வருகி ன்றனர். இந்நிறுவனத்தின் மூலம் சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் சட்டப்படி அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இத்தொ ழிற்சாலை செயல்படுகிறது என தெரிவித்தனர்.
- தேவிபாலா வைத்து இருந்த ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரை சேர்ந்தவர் பாலமுருகன்.
இவரது மனைவி தேவிபாலா (வயது 37). சலவைதொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதற்காக மகள்களுடன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்து யாரோ மர்மநபர் தேவிபாலா கட்டைபையில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.
பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுப்பதற்காக பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த தேவிபாலா இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). டிரைவர். இவர் தனது சொந்த ஊரான சத்திக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பஸ்சில் ஏறிய போது யாரோ மர்மநபர் கதிர்வேல் பேண்டின் பின் பாக்கெட்டில் ரூ.10,300 பணத்துடன் வைத்து இருந்த மணிபர்சை திருடி சென்றனர். இது அவரும் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது.
- திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொழியும் மழைநீர் காட்டாறுகள் மூலம் பில்லூர் அணைக்கு வந்தடைகிறது.
பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் நீரை மேட்டுப்பாளையம் தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டத்திற்கு 1, 2-வது கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் குழாய்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் போது நால்ரோடு, தேரம்பாளைம், நடூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத தால், அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிவு நீர் சாலையோரங்களில் வழிந்தோடும்.
இதேபோல நேற்று இரவு மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் கிராம த்தில் ஒரு இடத்தில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் அருகிலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்தது. தோட்டத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. விடிய, விடிய தண்ணீர் பாய்ந்ததால் கிணறு முழுவதும் நிரம்பி வழிந்தது.
கிணறு நிரம்பியதால் அருகிலுள்ள கருவேப்பிலை தோட்டத்திலும் தண்ணீர் சூழ்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து ள்ளனர். தற்போது மழை பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நேரத்தில் இவ்வளவு குடிநீர் வீணானது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெள்ளாதி ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது -
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.
இச்சூழ்நிலையில் தேரம்பாளையம் பகுதியில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை என்றனர்.
- 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
- போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இளம்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தனர்.
முதலில் தனது மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அவரை கண்காணித்தார். அப்போது மனைவி, வாலிபருடன் பேசுவதை அறிந்து கொண்டார்.
இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க இளம்பெண்ணின் கணவர் முடிவு செய்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார்.
.
பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இளம் பெண்ணின் கணவர் வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் வெளியில் சென்றதும், இளம்பெண், தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபரை வீட்டிற்கு அழைத்தார். அவரும், இங்கு வந்தார். பின்னர் 2 பேரும் வீட்டிற் குள் தனிமையில் இருந்தனர். இதனையறிந்த இளம் பெண்ணின் கணவர், தனது உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, இளம்பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து 2 பேரையும் அழைத்து கொண்டு அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து, அவரது மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டு ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் நிகழ்ச்சி விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ள து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை கோவில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்ப ரை அறங்காவலர் வசந்தா ஆகியோ ர் செய்து வருகின்றனர்.
- பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்குகின்றனர்.
- பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் டீ குடிப்பது போல் அமர்ந்தார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
அப்படி வரும் பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர். அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய த்தில் நடை மேடையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர மர்மநபர் ஒருவர் ஏற்கனவே படுத்து உறங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் அமர்ந்து பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.
சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார்.
வீடியோ பரவுகிறது
பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி. சி. டி. வி காமிராவினை ஆய்வு செய்த போது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை .தற்போது சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






